Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிட்ரோனின் இந்திய சந்தைக்கான 4 தயாரிப்பு கார்கள்... அடுத்த ஆண்டில் இருந்து வெளிவரவுள்ளன...
சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருடன் கூடுதலாக மூன்று மாடல்கள் என மொத்தமாக 4 தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
பிரெஞ்சு ஆட்டோமொபைல் க்ரூப்பான பிஎஸ்ஏ, சிட்ரோன் ப்ராண்டின் மூலமாக மீண்டும் இந்திய சந்தையில் நுழைய தயாராகி வருகிறது. இதன்படி சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் அடுத்த ஆண்டின் முதல் கால்பகுதியில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
இந்த நிலையில் தான் சிட்ரோன் ப்ராண்டில் மேலும் மூன்று மாடல்கள் இந்திய சந்தைக்காக வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் மாடலாக ஏற்கனவே நமக்கு தெரிந்த சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் சிகேடி முறையில் நம் நாட்டில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.
ஆனால் இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் இருந்து அடுத்தடுத்ததாக அறிமுகமாகவுள்ள மற்ற மூன்று கார்களும் சிட்ரோனின் சி-கப்டு ப்ரோகிராமின் அடிப்படையில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட உள்ளன.
இந்த கூடுதலான மூன்று மாடல்களில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி, ப்ரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் சி-பிரிவு செடான் உள்ளிட்டவை அடங்கும். இதில் சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடல் தான் சி-கப்டு ப்ரோகிராமின் அடிப்படையில் சி21 என்ற குறியீட்டு பெயருடன் சிட்ரோன் ப்ராண்ட்டில் இருந்து வெளிவரும் இரண்டாவது தயாரிப்பாக விளங்கவுள்ளது.
2021ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி கார், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக விளங்கவுள்ளது.
மற்றபடி எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்த எந்த திட்டமும் சிட்ரோன் நிறுவனத்திடம் தற்போதைக்கு இல்லை. ஆனால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள வாகனங்கள் எலக்ட்ரிக் வெர்சனை பெறலாம் என சிட்ரோன் நிறுவனத்தின் முன்னாள் சிஇஒ லிண்டா ஜாக்சன் ஏற்கனவே கூறியிருந்தார்.
மேலும், தயாரிப்புகள் அனைத்தும் சி-கப்டு ப்ரோகிராமின் அடிப்படையில் தான் இந்திய சந்தைக்காக தயாரிக்கப்படவுள்ளன. 90 சதவீதம் இந்தியாவிலேயே உருவாக்கப்படவுள்ள இந்த தயாரிப்புகளை பிஎஸ்ஏ க்ரூப்பை சேர்ந்த வேறெந்த நிறுவனமும் விற்பனை செய்யாது எனவும் ஜாக்சன் தெரிவித்தார்.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?