Just In
- 4 hrs ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- 9 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 11 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 11 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
Don't Miss!
- News மோடிக்கு தமிழ்ப் பற்று வந்தது எப்படி? பாரிவேந்தர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
- Movies அசிஸ்டன்ட் டைரக்டர் இல்ல..மணமக்களை வாழ்த்துக்கள் ஷங்கர் பேச்சு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை வெற்றி.. ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்கில் புதிய ரெக்கார்டு
- Technology மாஸ் காட்டிய Portronics.. ரூ.1500 விலை.. யாரும் பார்த்திடாத புது டிசைன்.. புது வகை இயர்போன்ஸ்.. என்ன மாடல்?
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
கோவை: பிரபல ரேஸ் கார் ட்யூனிங் நிபுணர் விஜயகுமார் தற்கொலை!
கோவையை சேர்ந்த பிரபல ரேஸ் கார் ட்யூனிங் நிபுணர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மோட்டார் பந்தய பிரியர்கள், வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (43). கார் ரேஸராக இருந்து பின்னர் ரேஸ் கார்களை ட்யூனிங் செய்யும் ஒர்க்ஷாப்பையும் துவங்கி நடந்தி வந்தார். இதனால், இவர் கார் பந்தய வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக மாறினார்.
விஜயகுமார் ட்யூனிங் செய்து கொடுத்த ரேஸ் கார்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த துறையில் இருந்த ஆர்வம் காரணமாக, ரேஸ் கார் ட்யூனிங் ஒர்க்ஷாப்பை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார். இதற்காக, அதிக பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்பார்த்த அளவு போதிய வருவாய் இல்லை என்று தெரிகிறது. இதனால், ஒர்க்ஷாப்பை விட்டுவிட்டு, கோவை கருமத்தம்பட்டியல், ஸ்பின்னிங் மில் ஒன்றை ஒத்திகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த நிலையில், ஸ்பின்னிங் மில் தொழிலிலும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 28ந் தேதி விரக்தியில் ஸ்பின்னிங் மில் உள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்பின்னிங் மில்லிற்கு வந்த நிறுவனத்தின் மேலாளர், அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பின்னர், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், உடல் கூறு ஆய்வுக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு வந்து, அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொழிலில் தொடர் நஷ்டம் காரணமாக, ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அப்போது உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர்.. விஜயகுமாருக்கு மோட்டார் பந்தய உலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
-
எல்லாரும் லட்டு கொடுத்து கொண்டாட போறாங்க.. புதிய ஸ்விஃப்ட் மே 2வது வாரத்துக்குள் அறிமுகமாக போகுதா!
-
31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
-
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!