Just In
- 2 hrs ago ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- 4 hrs ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 6 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 7 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
Don't Miss!
- Lifestyle ஒரு நிமிடத்திற்கு 13 முறைக்கு குறைவாக கண் சிமிட்டுறீங்களா? அப்ப இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு..
- News "சுயமரியாதை" தான் முக்கியம்.. பாஜகவில் எழுந்த குரல்.. குஜராத் எம்எல்ஏ திடீர் ராஜினாமா! என்ன நடந்தது
- Technology இப்படி இருந்தா விடுவமா.. கஸ்டமர்கள் கும்பிடு.. மாதம் ரூ.149 போதும்.. 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!
- Finance பெங்களூர்: அடுத்த பத்தாண்டுக்குள் 40% மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதாம்!
- Sports குண்டைத் தூக்கிப் போட்ட பிசிசிஐ.. ஐபிஎல்-இல் டிஆர்எஸ் நீக்கம்.. இனி ரிவ்யூ கேட்டால் இதுதான் நடக்கும்
- Movies AR Murugadoss: 5 வருஷத்துக்கு முன்னாடியே சல்மான்கிட்ட கதையை சொல்லிட்டேன்.. ஏஆர் முருகதாஸ் வெளிப்படை!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
கோவை: பிரபல ரேஸ் கார் ட்யூனிங் நிபுணர் விஜயகுமார் தற்கொலை!
கோவையை சேர்ந்த பிரபல ரேஸ் கார் ட்யூனிங் நிபுணர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மோட்டார் பந்தய பிரியர்கள், வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (43). கார் ரேஸராக இருந்து பின்னர் ரேஸ் கார்களை ட்யூனிங் செய்யும் ஒர்க்ஷாப்பையும் துவங்கி நடந்தி வந்தார். இதனால், இவர் கார் பந்தய வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக மாறினார்.
விஜயகுமார் ட்யூனிங் செய்து கொடுத்த ரேஸ் கார்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த துறையில் இருந்த ஆர்வம் காரணமாக, ரேஸ் கார் ட்யூனிங் ஒர்க்ஷாப்பை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார். இதற்காக, அதிக பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்பார்த்த அளவு போதிய வருவாய் இல்லை என்று தெரிகிறது. இதனால், ஒர்க்ஷாப்பை விட்டுவிட்டு, கோவை கருமத்தம்பட்டியல், ஸ்பின்னிங் மில் ஒன்றை ஒத்திகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த நிலையில், ஸ்பின்னிங் மில் தொழிலிலும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 28ந் தேதி விரக்தியில் ஸ்பின்னிங் மில் உள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்பின்னிங் மில்லிற்கு வந்த நிறுவனத்தின் மேலாளர், அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பின்னர், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், உடல் கூறு ஆய்வுக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு வந்து, அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொழிலில் தொடர் நஷ்டம் காரணமாக, ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அப்போது உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர்.. விஜயகுமாருக்கு மோட்டார் பந்தய உலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
-
சோப்பு டப்பாக்களுக்கு பாடம் நடத்தும் டாடா கார்... விலை இவ்ளோதானா... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
-
வீட்டிற்கே தேடிவந்த சொகுசு கார்... டெலிவிரி எடுத்தது அந்த பிரபல நடிகரின் மனைவியா!!
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்