Just In
- just now அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 39 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கடைசி நேரத்தில் புதிய ட்விஸ்ட்... கார், பைக் ஷோரூம்களுக்கு அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?
கடைசி நேரத்தில் புதிய ட்விஸ்ட் ஆக, கார் மற்றும் பைக் டீலர்களுக்கு அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் தற்போது ஆட்டி படைத்து கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 120க்கும் அதிகமான நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில், சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள்தான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 6,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர 1.70 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 114 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் அடர்த்தி அதிகம் என்ற காரணிக்கு மத்தியிலும் கூட உலகின் ஒரு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு சற்று குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். ஆனால் இங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனால் மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாகன டீலர்ஷிப்களை மூடும்படி ஒரு சில மாநில அரசுகள் அதிரடியாக உத்தரவிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிசா மாநிலம் கஞ்சம் இதற்கு ஒரு உதாரணமாக உள்ளது.
கஞ்சம் பகுதியில் உள்ள வாகன டீலர்ஷிப்களை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடும்படி ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரிலும் ஒரு சில டீலர்களுக்கு இதேபோன்றதொரு உத்தரவை அம்மாநில அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி ஷோரூமை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாகன டீலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் இந்தியாவில் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வர இன்னும் 15 நாட்களுக்கும் குறைவான கால அவகாசமே உள்ளது. மிக கடுமையான பிஎஸ்-6 விதிகள் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
இதனால் தற்போது கைவசம் இருக்கும் பிஎஸ்-4 வாகனங்களின் ஸ்டாக்குகளை விற்று க்ளியர் செய்வதில் டீலர்கள் மும்முரமாக உள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவி விடுமோ? என்ற அச்சம் காரணமாக டீலர்ஷிப்களுக்கு வாடிக்கையாளர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளதால், அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் ஷோரூம்களை மூடும்படி அரசிடம் இருந்து அதிரடி உத்தரவு வந்துள்ளதால், டீலர்கள் திகைத்து போயுள்ளனர். இது குறித்து வட இந்தியாவை சேர்ந்த டீலர்ஷிப் ஊழியர் ஒருவர் கூறுகையில், 'கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலியாக டீலர்ஷிப்களுக்கு வாடிக்கையாளர்கள் வருவது ஏற்கனவே குறைந்து போயுள்ளது.
இதனால் பிஎஸ்-4 சரக்குகளை விற்பனை செய்யும் எங்களின் முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இந்த சூழலில்தான் அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது'' என்றார். ஆனால் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA - Federation of Automobile Dealers Associations) இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
Note: Images used are for representational purpose only.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!