Just In
- 29 min ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 5 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 5 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 6 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம்... கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியது
நன்றியை மறக்காத இங்கிலாந்து நிறுவனம், கொரோனா வைரஸிடம் இருந்து இந்தியர்களை காப்பாற்ற களமிறங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 19,658 பேரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்துள்ளது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 4,38,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன.
மேலும் நன்கொடைகளையும் வழங்க தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் 2 கோடி ரூபாய் நன்கொடையை தற்போது அறிவித்துள்ளது. குர்கான் மற்றும் ஹலோல் (வதோதரா) ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் இந்த தொகையில் வழங்கப்படும்.
மேற்கண்ட 2 நகரங்களிலும்தான் எம்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலை மற்றும் அலுவலகம் அமைந்துள்ளன. இந்த 2 கோடி ரூபாய் நன்கொடையில் 1 கோடி ரூபாயை எம்ஜி நேரடியாக வழங்குகிறது. எஞ்சிய 1 கோடி ரூபாயை எம்ஜி நிறுவனத்தின் ஊழியர்கள் நன்கொடையாக வழங்குகின்றனர். கொரோனா வைரஸை எதிர்த்து போரிட்டு வரும் இந்தியாவிற்கு எம்ஜி நிறுவனம் உதவ முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
இந்த 2 கோடி ரூபாயில், கையுறைகள், மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் மற்றும் படுக்கைகள் ஆகியவற்றை எம்ஜி நிறுவனம் வழங்கவுள்ளது. குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் தேவையை பொறுத்து, அதற்கு ஏற்ப உதவி செய்யப்படும். இதற்காக சமூக வலை தளங்களில் எம்ஜி நிறுவனத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கிய முதல் தயாரிப்பு ஹெக்டர். எஸ்யூவி ரக காரான எம்ஜி ஹெக்டர் இந்திய மார்க்கெட்டில் டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி ஹெக்டர் காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
எஸ்யூவி செக்மெண்ட்டில் அனைவரும் விரும்பும் மாடல்களில் ஒன்றாக எம்ஜி ஹெக்டர் திகழ்ந்து வருகிறது. இதில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான வசதிகள் மற்றும் மிக சவாலான விலை ஆகிய காரணங்களால்தான் இந்திய வாடிக்கையாளர்கள் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு இந்த அளவிற்கு வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.
இந்தியர்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றிக்கடனாக தற்போது எம்ஜி நிறுவனம் உதவி செய்ய முன்வந்துள்ளது. ஹெக்டரை தொடர்ந்து இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!