Just In
- 7 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
Don't Miss!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா எஃபெக்ட்... கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் எடுத்து வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர்!
கொரோனா வைரஸ் பாதிப்பால், கார் தயாரிப்புக்கான உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் வைத்து எடுத்து வருவதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் உயிர்கொல்லி தொற்று நோயால், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் தாக்கம் இப்போது உலக அளவில் எதிரொலிக்க துவங்கி இருக்கிறது. உலகின் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களுக்கும் பல முக்கிய உதிரிபாகங்கள் சீனாவிலிருந்துதான் பெறப்படுகின்றன.
இந்த சூழலில், அங்கு ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால், உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் ஆலைகளுக்கு உதிரிபாகங்கள் சப்ளை தடைபட்டுள்ளது. இதனால், பல முன்னணி நிறுவனங்களின் கார் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இதுகுறித்து தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரால்ஃப் ஸ்பெத் கூறுகையில்,"அடுத்த இரண்டு வாரங்களுக்கான உதிரிபாகங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கடுத்த வாரத்திற்கான உதிரிபாகங்கள் போதுமான அளவு இல்லை. சீனாவிலிருந்து கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் வைத்து விமானம் மூலமாக எடுத்து வருகிறோம். இதன்மூலமாக, தற்காலிகமாக கார் உற்பத்தி பணிகளில் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறோம். இதே நிலை நீடித்தால், நிச்சயம் கார் உற்பத்தி முடங்கும் வாய்ப்புள்ளது.," என்று தெரிவித்துள்ளார்.
சீன உதிரிபாகங்கள் சப்ளை பிரச்னையால், இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், இந்திய ஆலைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று கருதுகிறோம் என்று டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டெர் பட்செக் தெரிவித்துள்ளார்.
சீனாவில் எழுந்துள்ள நெருக்கடியான நிலையையும், கார் உற்பத்தியில் எழும் சிக்கல்கள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தேவைப்பட்டால், உற்பத்தி பணிகளில் புதிய முறைகளை கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஃபியட் க்றைஸ்லர், ஜேசிபி எந்திர உற்பத்தி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் நிறுவனங்களும் சீன உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவித்துள்ளன.
சீனாவில் செயல்பட்டு வரும் பல கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை மூடி வைத்துள்ளன. அடுத்த வாரத்தில் கார் ஆலைகளை திறக்க ஹோண்டா உள்ளிட்ட சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. படிப்படியாக உற்பத்தியை சீராக்குவதற்கு திட்டமிட்டுள்ளன.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!