Just In
- 35 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 46 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்த விஷயம் தெரியுமா? லாக் டவுன் முடிஞ்ச பிறகு உங்க வீட்டிற்கு புது கார் வர சான்ஸ் இருக்கு...
லாக் டவுன் முடிந்த பிறகு, இந்தியாவில் பலரது வீடுகளுக்கு புதிய கார் வருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது வேகமாக பரவி வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும், கோவிட்-19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.
கோவிட்-19 வைரஸ் உயிர் பலி வாங்கி வருவதுடன், பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் தற்போது ஊரடங்கு உத்தரவை அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இதனால் பல்வேறு விதமான தொழில்கள் முடங்கி போயுள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பஸ் மற்றும் ரயில் சேவைகள் ரத்தாகியுள்ளன. மேலும் விமான சேவைகளும் முடங்கியுள்ளன. அத்துடன் வாகனங்களின் விற்பனையும் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தியா உள்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் தற்போது இந்த நிலைமைதான் காணப்படுகிறது.
இந்த சூழலில், பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் வாகன விற்பனை சரிவை சந்தித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2020 காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில், பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா 12.04 சதவீத சரிவை சந்தித்துள்ளது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்), மொத்தம் 2,482 பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களை பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா டெலிவரி செய்துள்ளது.
இதில், பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 2,365. அதே சமயம் மினி இந்தியா விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 117. நடப்பு காலண்டர் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், ஒட்டுமொத்தமாக 2,482 வாகனங்களை, பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2019ம் ஆண்டின் இதே கால கட்டத்தில் (ஜனவரி-மார்ச் வரையில்), பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா 2,822 வாகனங்களை டெலிவரி செய்திருந்தது. இது 12.04 சதவீத வீழ்ச்சியாகும். அதே நேரத்தில் பிரிமீயம் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில், பிஎம்டபிள்யூ மோட்டோராடு நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பிஎம்டபிள்யூ மோட்டோராடு நிறுவனம் மொத்தம் 1,024 மோட்டார்சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பிஎம்டபிள்யூ மட்டுமல்லாது, மாருதி சுஸுகி மற்றும் டாடா போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
ஆனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தி கொள்ளப்பட்ட பிறகு, வாகனங்களின் விற்பனை மீண்டும் டாப் கியரில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா அச்சம் காரணமாக, பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை மக்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு பதிலாக கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிப்பதை அவர்கள் பாதுகாப்பானதாக கருதலாம்.
எனவே ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு, பலரது வீடுகளில் புதிய கார்கள் நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய கார்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விற்பனையை மீண்டும் மீட்டெடுத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!