Just In
- 23 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 1 hr ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 4 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 5 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூப்பர்... உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கம்பெனியின் அதிரடி அறிவிப்பால் இந்திய டாக்டர்கள் நெகிழ்ச்சி
முன்னணி நிறுவனம் ஒன்று, இந்திய டாக்டர்களுக்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா வைரஸால் (கோவிட்-19) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க முடியாமல், உலகின் முன்னணி நாடுகள் கடுமையாக திணறி வருகின்றன. இதற்கு உலக வல்லரசான அமெரிக்கா மிகச்சிறந்த உதாரணம். அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் மற்ற நாடுகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை, கோவிட்-19 வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது. கோவிட்-19 வைரஸை எதிர்த்து போரிடுவதற்காக, அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. இதில், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த வகையில் உள்ளது.
கோவிட்-19 வைரஸை எதிர்த்து போரிட, வென்டிலேட்டர்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே அவற்றை அதிகளவில் உற்பத்தி செய்யும் பணியில், உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. இதுதவிர நிதியுதவிகளையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாரி வழங்கி கொண்டுள்ளன.
இந்தியாவிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிந்துள்ளது. இருந்தபோதும் கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன.
இதில், எம்ஜி மோட்டார் நிறுவனமும் ஒன்று. கோவிட்-19 வைரஸ் பொருளாதார ரீதியாகவும் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள் நிறுவனங்கள் ஆட் குறைப்பு மற்றும் ஊதியம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆனால் பணியாளர்களின் வேலையை பறிக்க மாட்டோம் என எம்ஜி மோட்டார் இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு அதிரடி அறிவிப்பை எம்ஜி மோட்டார் இந்தியா வெளியிட்டுள்ளது. இதன்படி டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக எம்ஜி மோட்டார் இந்தியா 100 கார்களை வழங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை எம்ஜி மோட்டார் இந்தியா நேற்று (ஏப்ரல் 22) வெளியிட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா வழங்கவிருப்பது ஹெக்டர் கார்கள் ஆகும். எஸ்யூவி ரக காரான இது, இந்தியாவில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக உள்ளது. வரும் மே மாதம் வரை இந்த சேவை வழங்கப்படும் என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அனைத்து கார்களும் எரிபொருள் மற்றும் டிரைவர்களுடன் வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்ற டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் விதமாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் டீலர்கள் மூலமாக, மாநில அரசுகளின் விதிமுறைகளின்படி கார்கள் சப்ளை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்திலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இப்படியான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
கோவிட்-19 வைரஸை எதிர்த்து போரிடுவதற்காக, இங்கிலாந்து முழுவதும் என்ஹெச்எஸ் ஏஜென்சிகளுக்கு, 100 கார்களை வழங்குவதற்கு, எம்ஜி மோட்டார் யுகே நிறுவனம் முன்வந்துள்ளது. இங்கிலாந்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார்கள் வழங்கப்படுகின்றன. எம்ஜி நிறுவனத்தின் இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலும் பிரபலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!