Just In
- 28 min ago ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- 1 hr ago சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
- 4 hrs ago ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- 4 hrs ago ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
Don't Miss!
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- News மூச்சுமுட்டிய பொதுக்கூட்டம்.. தென்காசியில் எடப்பாடியின் பரப்புரையில் நெரிசலில் சிக்கி முதியவர் பலி
- Sports 17 வயது சிறுவனின் கனவை உடைத்து எறிந்த ட்ராவிஸ் ஹெட்.. ஈவு இரக்கமே இல்லாமல் அடித்த உலகக்கோப்பை நாயகன்
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விநோதம்! ஸ்பீடு போஸ்ட் மூலம் வாகன ஓட்டிகளை மிரள வைக்கும் போலீஸார்... என்னனு தெரிஞ்சா அசந்துருவீங்க!
கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இத்துடன் சேர்ந்தே விதிமீறல்களும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றை களையெடுக்க தலைநகர் போலீசார் மிகவும் தனித்துவமான நடவடிக்கையைக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். வாருங்கள் இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நெடு நீண்ட காலமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றது. தற்போது நான்காம் கட்டத்திற்கு இந்த தடையுத்தரவு உயர்த்தப்பட்டுள்ளது. முதல் மூன்று நிலைகளில் காணப்படாத அளவிலான தளர்வுகள் இந்த நான்காம் நிலை ஊரடங்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கியிருக்கின்றன.
அரசின் இந்த நிலையால் இந்தியா மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு இருந்ததைப் போன்று இது இல்லையென்றாலும், சாலைகளில் சற்றே வாகன நெரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கின்றது.
அதிலும், இந்தியாவின் முக்கிய நகரங்களில் டிராஃபிக் ஜாம் ஏற்படுமளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.
இந்த வாகன நெரிசலுடன் சேர்ந்தே போக்குவரத்து விதிமீறல்களும் தலைதூக்க தொடங்கியிருக்கின்றன.
எனவே, வைரஸ் பரவலை தடுப்பது மட்டுமின்றி விதிமீறல்களை களையெடுப்பதிலும் போலீசார் தனிக் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசால் இக்கட்டான சூழல் நிலவுவதால் விதிமீறல் வாதிகளை கையாள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், அவர்களை கையாள தனித்துவமான யுக்தியை கையாள்வது அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை விதிமீறும் வாகன ஓட்டிகளை களையெடுக்க தனித்துவமான நடவடிக்கைகளைக் கையாளத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லி காவல்துறை, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது தபால் மூலம் அபராத இ-செல்லாண் மற்றும் நோட்டீஸ்களை அனுப்பி வருவது தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை, விதிமீறுபவர்களிடம் இருந்து போலீசார்களை சற்று விலகி வைக்க உதவும்.
இந்த புதுவிதமான நடவடிக்கையின்மூலம், டெல்லி காவல்துறை இதுவரை 1,00,436 நோட்டீஸ்களை குறுஞ்செய்தி வாயிலாகவும், ஸ்பீட் போஸ்ட் வாயிலாக 80 நோட்டீஸ்களையும் அனுப்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையனைத்தையும், சாலையோர கேமிராக்களின்மூலம் கண்டறியப்பட்ட விதிமீறல் சம்பவங்கள் ஆகும்.
மார்ச் 25 முதல் மே 17 வரையிலான காலகட்டத்தில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலேயே இந்த அபராத செல்லாண்கள் விதிமீறல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, டெல்லி காவல்துறையினர் பிரத்யேக கேமிரா ஆப் மூலமும் அபராதங்களை விதிமீறல் வாதிகளுக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்மூலம், 7,998 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
டெல்லி போலீசாரின் இந்த தனித்துவமான அதிரடி நடவடிக்கைகள், விதிமீறும் வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று, நாடு முழுவதும் போலீஸார் வாகன விதிமீறல்களைக் குறைப்பதற்கான பணியில் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றனர். குறிப்பாக, தேசியளவில் அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். லத்தி சார்ஜ், வழக்கு பதிவு, விநோத தண்டனைகள் மற்றும் அபராதம் உள்ளிட்ட யுக்திகளை அவர்கள் கையாண்டனர்.
இந்த நிலையிலேயே விதிமீறல் வாகன ஓட்டிகளிடம் இருக்கும் நேரடி தொடர்பைத் தவிர்க்கும் விதமாக டெல்லி போலீஸார், குறுஞ்செய்தி மற்றும் தபால் மூலமாக அபராதங்களை விதிக்கும் பணியில் இறங்கியிருக்கின்றனர். இதனால், வாகன ஓட்டி மற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்ற அபாயம் நீங்கியிருக்கின்றது.
-
புதுசா கார் வாங்க போறீங்களா! டாப்5 ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் கொண்ட கார்கள் லிஸ்ட்! எல்லாமே எஸ்யூவி கார்
-
இந்த பேருக்காவே கூட்டம் கூட்டமா போய் வாங்க போறாங்க... மாருதி, டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்!
-
எல்லாரும் ராயல் என்ஃபீல்டை தேடி ஓடி வருவதற்கு காரணம் என்னவா இருக்கும்? கவாஸாகி ரொம்ப போராடுது!!