Just In
- 38 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 7 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 8 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- News தமிழ்நாட்டில் பாஜக வலுவாகிறது.. தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது.. பிரதமர் மோடி
- Movies Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
வேற லெவலுக்கு போகும் டெல்லி... மாஸ் காட்டும் கெஜ்ரிவால்! மற்ற மாநிலங்கள் எல்லாம் பாத்து கத்துக்கணும்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
இந்தியாவிலேயே காற்று மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நகரம் டெல்லி. அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. எனவே தலைநகர் டெல்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக டெல்லி மாநில அரசின் மின்சார வாகன கொள்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானிய தொகை வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதன்படி மின்சார கார்களை வாங்குபவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கவுள்ளது.
இதன்மூலம் மின்சார வாகனங்களை வாங்குவதற்கான செலவு குறையும் என்பதால், அவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் டெல்லியில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக மின்சார வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முயற்சிகளை டெல்லி மாநில அரசு தற்போது முடுக்கி விட்டுள்ளது. இதன்படி டெல்லியில் 200 சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பதற்கான பணிகளை டெல்லி அரசு தற்போது தொடங்கியுள்ளது. அரசின் பல்வேறு துறைகள் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றன.
டெல்லியில் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பதற்காக அம்மாநில அரசு ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், டெல்லி மாநில அரசு, டெல்லி மேம்பாட்டு ஆணையம், டெல்லி போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான இடங்களை கண்டறிய அடுத்த இரு வாரங்களில், விரிவான திட்டமிடலை அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு அதிகப்படியான பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உதவி செய்யும் என்பதால், அவற்றை வேகமாக கட்டமைப்பதில் டெல்லி அரசு தீவிரமாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இந்தியாவில் டெல்லியை மின்சார வாகனங்களின் தலை நகரமாக மாற்றுவதற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார். உலக அளவில் பார்த்தாலும் கூட, டெல்லியில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது'' என்றனர்.
டெல்லி மாநில அரசை பொறுத்த வரையில், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன செக்மெண்ட்டில்தான், மின்சார வாகனங்களுக்கான மாற்றம் மிகப்பெரிய அளவில் நடக்க வேண்டும் என விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதற்கு சிறப்பு கவனம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி ஸ்லோ சார்ஜிங் ஸ்டேஷன்களை (ஒவ்வொன்றும் 3.3 kW) அதிக அளவில் கட்டமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை (ஒவ்வொன்றும் 15 kW) குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க அதிக செலவு ஆகும். மிக விலை உயர்ந்த இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் பிரீமியம் நான்கு சக்கர வாகனங்களுக்குதான் அதிகம் பயன்படும். எனவே அவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைத்து விட்டு, அதற்கு பதிலாக ஸ்லோ சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிக அளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றனர்.
டெல்லி அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, அங்கு வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பெரும் அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு உதவி செய்யும். டெல்லியை போன்று இன்னும் பல்வேறு மாநிலங்களும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றன.
Note: Images used are for representational purpose only.
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!