Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அரசாங்க ஜீப்பில் மனைவிக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்த அதிகாரி!
தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலையில் வருவாய் கோட்டாட்சியர் மனைவி, அதனை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் செயல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கொடிய உயிர் கொல்லி வைரஸ் கொரோனா அச்சம் காரணமாக உலகம் முழுவதிலும் பீதியான சூழ்நிலையே காணப்படுகின்றது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலின் காரணமாக அச்சம் நிறைந்த சூழலே நிலவுகின்றது. இதற்காக தேசியளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 14ம் தேதியோடு முடிவடைய இருந்த தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஜூன் மாதம் 3ம் தேதி வரை இது நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கடந்த 14ம் தேதி ஊடகம் வாயிலாக மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்ற வேண்டுகோளையும் அவர் முன் வைத்தார்.
இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் மனைவி, பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளையும், அரசின் எண்ணத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர், ஊரடங்கு உத்தரவில் காலியாக இருக்கும் சாலையை கார் ஓட்ட பயிற்சிப் பெறுவதற்காக பயன்படுத்தியிருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது. இதுகுறித்த வீடியோ மற்றும் தகவலை டிவி9 என்ற தொலைக்காட்சி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ராய்பூரில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இம்மாவட்டத்தின் வருவாய் கோட்டாடட்சியராக செயல்பட்டு வருகின்றார் அணில் ஜெயின். இவரின் மனைவி கிரண் ஜெயின்.
இவர்தான் அணில் ஜெயினுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ பொலிரோ எம்யூவி காரை சாலையில் இயக்கிச் சென்றுள்ளார். அவர் காரை இயக்கியபோது அருகில் ஓர் ஆண் இருந்துள்ளார்.
இருப்பினும், கிரண் அந்த காரை சாலையில் சற்று பொறுமையாக இயக்கிச் சென்றுள்ளார். வழக்கத்திற்கு மாறாக கார் ஊர்ந்து செல்வதை உணர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், அதனை பின் தொடர்ந்து வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார்.
இதையுணர்ந்த வருவாய் கோட்டாட்சியரின் மனைவி சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு பின்னிருக்கைக்குச் சென்றார்.
இருப்பினும், விடப்பிடியாக சென்ற பத்திரிக்கையாளர் ஊரடங்கு உத்தரவில், கார் வெளியே வலம் வந்துக் கொண்டிருப்பதைப் பற்றி விசாரித்துள்ளார்.
ஆனால், இதற்கு எந்தவொரு பதிலும் அவர் அளிக்கவில்லை. மேலும், கார் ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார். அதற்கு, உரிமம் வீட்டில் இருப்பதாக மழுப்பலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிலர், அவர் கார் ஓட்ட பழகும் விதமாக வெளியே வந்திருப்பதாக அதிர்ச்சிமிகுந்த தகவலை பகிர்ந்துள்ளனர். எனவே, இதுகுறித்து நேரடியாகவே வருவாய் கோட்டாட்சியர் அணில் ஜெயினிடம் விசாரிக்க ஊடக குழு முற்பட்டது.
அப்போது அவர், "இந்த தகவல் நீங்கள் கூறிதான் எனக்கு தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த உரிய விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடுகிறேன்" என கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
வாகனம் ஓட்டுவதற்கு முறையான உரிமம் இருந்தால் கிரண் ஜெயினுக்கு இந்த விவகாரத்தில் பெரிய பிரச்னை எதுவும் ஏற்படாது.
இருப்பினும், நாடே அச்சத்தில் உறைந்திருக்கின்ற நிலையில் இவர் முகமூடி அணியாமல் கார் ஓட்ட பழகுவதற்காக வெளியே வந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நாடு முழுவதும் போலீஸார் இதுமாதிரி விதிமீறி வெளியில் வருபவர்களை லத்தியால் அடித்து துவைத்து எடுத்து வருகின்றனர். இதுபோதாதென்று வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் சில நேரங்களில் வாகனத்தை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எல்லாம் எடுத்து வருகின்றனர்.
இம்மாதிரியான நேரத்தில் அரசின் நோக்கத்தை சீர்குலைக்கும் விதமாக வருவாய் கோட்டாட்சியரின் மனைவி செயல்பட்டிருப்பது வேதனை அளிக்கும் நடவடிக்கையாக உள்ளது.
Image Courtesy: TV9 Bharatvarsh/YouTube
மனைவிக்கு பிடித்த விஷயங்களை கணவன் செய்ய வேண்டும்தான். ஆனால் இப்படி ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அரசாங்க ஜீப்பில் மனைவிக்கு டிரைவிங் எல்லாம் கற்று கொடுக்க கூடாது. இந்த கணவர் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு கணவரோ தன் மனைவிக்கு பிடிக்குமே என்பதற்காக 7 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக அவருக்கு பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் பொறாமைப்படக்கூடும். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
நமது மனதுக்கு நெருக்கமானவர்கள் அளிக்கும் பரிசு எதுவாக இருந்தாலும், அது மிகுந்த மகிழ்ச்சியை நமக்கு கொடுக்கும். அதுவே விலை உயர்ந்த பரிசுகள் என்றால் அந்த மகிழ்ச்சி அப்படியே இரட்டிப்பாகும். அப்படி ஒரு மகிழ்ச்சி தற்போது ஏனி பிலிப்பிற்கு (Anie Phillip) கிடைத்துள்ளது. ஏனி பிலிப்பின் கணவர், அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய கார் ஒன்றை தற்போது பரிசாக வழங்கியுள்ளார்.
கணவரிடம் இருந்து ஏனி பிலிப்பிற்கு பரிசாக கிடைத்திருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் ஆகும். இது சூப்பர் லக்ஸரி எஸ்யூவி ரகத்தை (Super Luxury SUV) சேர்ந்த மிக விலை உயர்ந்த கார். ஏனி பிலிப்பும், அவரது கணவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்தியர்கள் ஆவர். ஆனால் அவர்கள் தற்போது கனடாவின் வான்கூவர் நகரில் வசித்து வருகின்றனர்.
ஏனி பிலிப்பிற்கு அவரது கணவர் வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் இன்டீரியர் சிகப்பு நிற லெதர் மூலம் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. எனவே காண்பவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு, இந்த கார் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது. ஏனி பிலிப்பிற்கு இப்படியொரு பரிசு கிடைத்திருப்பதற்கான காரணம் சுவாரஸ்யமானது.
பொதுவாக திருமண நாட்கள் என்றாலே சிறப்பு வாய்ந்தவைதான். அதுவும் 25வது திருமண நாள் என்றால், சொல்லவே வேண்டாம். இந்த 25வது திருமண நாளை முன்னிட்டுதான் ஏனி பிலிப்பிற்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் பரிசாக கிடைத்துள்ளது. இதன் மூலமாக வட அமெரிக்க கண்டத்தில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை சொந்தமாக்கிய முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
ஏனி பிலிப்பும், அவரது கணவரும் கடந்த மார்ச் 30ம் தேதி தங்களது 25வது திருமண நாளை கொண்டாடினர். அன்றைய தினம்தான் இந்த தம்பதியருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஏனி பிலிப்பும், அவரது கணவரும் கார்களை அதிகம் நேசிக்க கூடியவர்கள். அவர்களிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்கள் மூலமாக அது தெரிய வருகிறது.
ஏனி பிலிப்பும், அவரது கணவரும் சொந்தமாக்கும் முதல் சொகுசு கார் இது கிடையாது. ஆனால் இதுதான் அவர்களின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார். இந்தியாவிலும், கனடாவிலும் அவர்களிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருக்கின்றன. ஏனி பிலிப் குடும்பத்தினரிடம் லக்ஸரி பேக்கேஜ் உடன் 2005 ஹம்மர் எச்2 கார் தற்போது இருக்கிறது.
மேலும் 2016 போர்ஷே கேயென் மற்றும் 2019 லெக்ஸஸ் என்எக்ஸ் (எஃப்-ஸ்போர்ட் பேக்கேஜ்) ஆகிய கார்களும் உள்ளன. தற்போது அவர்களது குடும்பத்தினரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரும் இணைந்திருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் அவர்களிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்350 எஸ்யூவி கார் இருக்கிறது. இந்தியா வரும்போதெல்லாம் அந்த காரை அவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்.
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 560 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்திய ரூபாய் மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை எவ்வளவு தெரியுமா? 6.95 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). உலக கோடீஸ்வரர்கள் பலரையும் கவர்ந்திழுக்கும் காராக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் திகழ்கிறது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!