Just In
- 48 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.50 கோடி நிதி உதவி: ஐஷர் அறிவிப்பு!
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத் திட்டங்களுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஐஷர் குழுமம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முயற்சிகளில் வாகன நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. மாருதி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் முக கவசம் மற்றும் வென்டிலேட்டர் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதேபோன்று, அனைத்து வாகன நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி மற்றும் இதர உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், வாகன உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஐஷர் குழுமம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.50 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளது.
மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை மையங்கள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். சிக்கலான இந்த நேரத்தில் இருந்து மீண்டு வருவதற்கு இந்த நிதி உதவி சிறப்பானதாக இருக்கும்.
அடுத்து வரும் மாதங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து கூடுதல் நிதி அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஐஷர் குழுமம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீல்வதற்கான நீண்ட கால மறுபுனரமைப்பு திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதற்கு அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கிருமி நாசினி மற்றும் தூய்மை நடவடிக்கைகளுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
தற்போது முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ள ரூ.50 கோடி நிதியை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலமாக தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சிகளிலும் ஐஷர் குழுமம் ஈடுபட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களை வழங்குவதற்கும், மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதற்குமான முயற்சிகளிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுப்பதற்கும் முடிவு செய்துள்ளது.
மேலும், தன் நிறுவனம் சார்பிலும், பணியாளர்கள் சார்பிலும் பிரதமர் நிவாரண நிதிக்கும், தமிழகம் மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் தங்களது நிதி பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தன் நிறுவனம் சார்பில் கொரோனா பாதித்தவர்களுக்கான சிறப்பு மருத்துவ மையங்கள், தனிமைப்படுத்துவதற்கான மையங்கள் மற்றும் நோயாளரி பராமரிப்பு விஷயங்களை செய்து கொடுக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஐஷர் குழுமத்தின் கீழ் இரண்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு மற்றும் வால்வோ - ஐஷர் மோட்டார் டிரக் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை ஐஷர் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?