Just In
- 35 min ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 2 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 2 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 3 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- News பேசிக்கொண்டு இருக்கும் போதே.. பாதியில் நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி.. சட்டென ஓபிஎஸ் தந்த ரியாக்சன்
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Movies நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
கைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்..! அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..!
மெர்சிடிஸ்-டாடா இணைந்து தயாரித்த அரிய வகை ஆம்புலன்சிற்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
இந்தியாவில் பல ஆயிரக் கணக்கான வாகன மாடிஃபிகேஷன் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இதுவரை இந்திய சாலைக் கண்டிராத வகையிலான ஓர் மாடிஃபிகேஷன் சம்பவம் தற்போது அரங்கேறி கொண்டிருக்கின்றது.
அதாவது, இதுவரை எந்தவொரு நபரும் செய்திராத வகையில், பழைய கால ஆம்புலன்ஸ் ஒன்றை மாடிஃபிகேஷன் மூலம் புத்துயிர் வழங்கும் முயற்சியை கேரளத்து சேட்டன்மார்கள் சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்த புகைப்படம்தான் தற்போது வாகன துறையின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் ஓர் 1988ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ124 மாடலாகும்.
இது ஓர் அரிய வகை ஆம்புலன்ஸ் ஆகும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், அப்போதைய விவிஐபி-க்களின் பயன்பாட்டிற்காக பிரத்யேக அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட ஆம்புலன்ஸ்தான் இது.
உயிர் காக்கும் உண்ணதமான அம்சங்களில் ஆம்புலன்சும் ஒன்றாகும். விபத்தில் சிக்கி நலமுடன் வாழும் பலர் இதனை தெய்வமாகவே பார்த்து வருகின்றனர்.
இக்கட்டான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உரிய மருத்துவ முதலுதவியை வழங்கவும், தக்க நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்க்கவும் இந்த வாகனங்கள் உதவி வருகின்றன.
எனவேதான் ஆம்புலன்ஸ்களை அக்காலத்து விவிஐபி-க்களின் கான்வாயிலும் அப்போதைய அரசுகள் பயன்படுத்தி வந்தன. அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காகவும், அவர்களது அவசர உதவிக்காகவும் பயன்படும் வகையில் இயங்கி வந்த ஆம்புலன்ஸ்தான் மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ124.
இதற்கு புத்துயிர் வழங்கும் முயற்சியில்தான் கேரளத்து சேட்டன்மார்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெகு நீண்ட காலமாக சாலையோரத்தில் இந்த ஆம்புலன்ஸ் கைவிடப்பட்டிருந்ததைக் கண்ட பின்னரே இந்த முயற்சியில் அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர்.
எனவே, கூடிய விரைவில் இந்த ஆம்புலன்ஸ் புத்தம் புது தோற்றம் மற்றும் அம்சங்களுடன் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது எப்போது வரும் என்ற தகவலை கஸ்டமைஸ் செய்து வரும் குழு தெரிவிக்கவில்லை. அதேசமயம், நீண்ட நாள் கைவிடப்பட்டிருந்தததால் அந்த ஆம்புலன்ஸ் கிட்டத்தட்ட முழுமையாக சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
ஆகையால், சற்று கூடுல் நாட்கள் எடுத்துக் கொள்ளப்படலாம் என யூகிக்கப்படுகின்றது. இந்த ஆம்புலன்ஸ் இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாக ராஷ்டிராபதிக்கு சொந்தமாக இருந்திருக்கின்றது. குறிப்பாக, 1990-களில் குடியரசு தலைவரின் கான்வாயில் மருத்துவ வாகனமாக பயன்பட்டு வந்தது. குறிப்பாக, முன்னால் குடியரசு தலைவர் பிவி நரசிம்ம ராவ் அவர்களின் கான்வாயில் இந்த ஆம்புலன்ஸ் பல முறை இடம்பெற்றிருக்கின்றது.
இந்த ஆம்புலன்ஸை மெர்சிடிஸ் நிறுவனம் முதல் முறையாக 1985ம் ஆண்டே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதான் அந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த ஆம்புலன்ஸ் ரக வாகனம் ஆகும். இதனை மெர்சிடிஸ் மட்டுமின்றி டாடா ஜேவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது குறிப்பிடத்தகுந்தது. எனவே, நாடு முழுவதும் இந்த மருத்துவ வாகனத்திற்கு நல்ல டிமாண்ட் நிலவியது.
இந்த சிறப்புமிக்க வாகனத்தைதான் சேட்டன்மார்கள் புதுப்பித்து வருகின்றனர். இது எப்படி கேரளாவிற்கு வந்தது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், புகைப்படம் மற்றும் புத்துயிர் வழங்குவது பற்றிய தகவல் மட்டுமே தற்போது வெளியாகவில்லை. இதன் புகைப்படங்கள் சிலவற்றை டீம் - பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.