Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நம்ம சன்னி லியோனுக்கு அப்புறம் இவங்தான் டிரெண்ட்... இவங்க இப்படி செய்வாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாம் தற்போது நாடு தழுவிய ஊரடங்கின் மூன்றாம் கட்டத்தில் இருக்கின்றோம். இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சமான சூழ்நிலையே மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அண்மைக் காலங்களாக மிக தீவிரமாக உயர்ந்து வரும் கொரோனா வைரசின் பாதிப்பே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
மூன்றாம் கட்ட தடையுத்தரவை அமலுக்குக் கொண்ட மத்திய அரசு, அத்துடன் லேசான தளர்வையும் குறிப்பிட்ட துறைகளுக்கு வழங்கியது.
நாட்டின் பொருளாதாரத்தை மனத்தில் கொண்டு அளிக்கப்பட்ட இந்த தளர்வினால் பச்சை மண்டலங்களாக கருதப்படும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துள்ள பகுதிகள் மட்டுமே லேசான இயக்க நிலைக்கு திரும்பியிருக்கின்றன.
இருப்பினும், மக்களின் வழக்கமான நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையேக் காணப்படுகின்றது. ஆகையால், போலீஸார் ஆங்காங்கே தடைகளை அமைத்து தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வீணாக வெளியில் சுற்றி திரியும் பொதுமக்கள் மீது அவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையில் ஒரு சில நேரங்களில் முக்கிய பிரபலங்கள் சிலரும் சிக்கிக் கொள்கின்றனர். அந்தவகையில், தற்போது இந்தியாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்துக் கொண்டிருக்கும் பூனம் பாண்டே, லாக் டவுணை மீறி வெளியே சுற்றியக் காரணத்திற்காக போலீசாரால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு அடுத்தபடியாக இந்திய இளைஞர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் நடிகை மற்றும் மாடலாக இருந்து வருகின்றார் பூனம் பாண்டே. இவர் தற்போது, மஹாரஷ்டிரா மாநிலம், மும்பையில் வசித்து வருகின்றார்.
இவர் மீதுதான் போலீஸார் தற்போது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும், அரசின் உத்தரவை மீறி வெளியேச் சுற்றித் திரிந்ததன் காரணத்தினால் அவருடைய விலையுயர்ந்த சொகுசு காரையும் (பிஎம்டபிள்யூ 5 செரீஸ்) போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
செடான் ரகத்திலான இந்த காரில் பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பர்கள் இருவர் ஜாலி ரைடு செய்துக் கொண்டிருந்தபோது மும்பை போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் பூனம் பாண்டே மட்டுமின்றி அவருடைய நண்பர்கள் இருவர் மீதும் போலீஸார் வழக்கு பதிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, அவர்கள்மீது 269 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி-188ன் கீழும் பூனம் பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது, உயிருக்கு ஆபத்தான வைரசை பரப்பும் விதமாக செயல்பட்டது மற்றும் அரசு உத்தரை கீழ்ப்படியாதது உள்ளிட்ட காரணங்களுக்காக பூனம் பாண்டே மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
பூனம் பாண்டே மீதான இந்த நடவடிக்கை, அவரின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு சிலர் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மக்கள் பெரும்பாலனோர் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும்நிலையில், பூனம் வெளியே வந்தக் காரணத்திற்காக வசைப்பாடிய வண்ணம் இருக்கின்றனர்.
மேலும், போலீசாரின் நடவடிக்கைக்கு வரவேற்பையும் அளித்து வருகின்றனர். பூனம் பாண்டே இதுபோன்று சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. முன்னதாக பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கியிருக்கின்றார். அதற்காக நெட்டிசன்களிடம் பலமுறை வாங்கிக்கட்டியும் கொண்டுள்ளார்.
அதேசமயம், லாக்டவுண் விதிமீறலுக்கு வாகனத்தை பறிமுதல் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக பலரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதில், சில முக்கிய பிரபலங்களின் கார்களும் அடங்கும்.
அந்தவகையில், சமீபத்தில் தெலங்கானா மாநில போலீஸார் 1.2 லட்சம் வாகனங்களை விதிமீறிய குற்றத்திற்காக பறிமுதல் செய்ததாக தகவல் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதேபோன்று, தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்த அரசியல்வாதிகள் சிலரின் வாகனங்களையும் போலீஸார் கைப்பற்றிய சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறியிருக்கின்றது. வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொருவரையும் வீட்டுக்குள்ளேயே தங்குமாறு அரசும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றது.
இருப்பினும், பலர் வெளியே நடமாடிய வண்ணமே இருக்கின்றனர். இதன் விளைவாக கொரோனா வைரஸ் முந்தையக் காலங்களைக் காட்டிலும் மிக அதி வேகமாக தொற்றைப் பரப்பி வருகின்றது. அதுமட்டுமின்றி, மே17 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கும் வகையில் பரப்பும் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.