Just In
- 9 min ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 1 hr ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 3 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 7 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... மீண்டும் கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது!
இத்தாலியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மீண்டும் கார் உற்பத்தியை துவங்குவதற்கு ஃபெராரி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இத்தாலியை சேர்ந்த ஃபெராரி கார் நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் உலக அளவில் மிகவும் பிரலமானதாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையால் இத்தாலி பெரிய அளவில் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது.
அங்கு இதுவரை 86,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று வரை 9,134 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரை பறிகொடுத்துவிட்டனர்.
அங்கு இதுவரை 86,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று வரை 9,134 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரை பறிகொடுத்துவிட்டனர்.
கொரோனா பிரச்னையால் அதிகரித்த நிலையிலும், தொடர்ந்து கார் உற்பத்தி செய்து வந்தது ஃபெராரி. ஆனால், கடந்த 15ந் தேதி முதல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், கொரோனா பிரச்னை அங்கு நாளுக்கு நாள் தீவிரமாகவே இருந்து வருகிறது.
இந்த சூழலில், அடுத்த மாதம் 14 முதல் இத்தாலியில் உள்ள தனது ஆலையில் கார் உற்பத்தியை துவங்குவதற்கு ஃபெராரி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உதிரிபாகங்கள் சப்ளை சீரடைந்தால், உற்பத்தியை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலை, அடுத்த மாத மத்தியில் சீரடைந்துவிடும் என்று கருதி, இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பணியாளர்கள் நலன் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கான திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், காலாண்டு வருவாய் குறித்த முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான பங்கு வழங்குவது குறித்த முடிவுகளை வரும் மே 4ந் தேதி ஃபெராரி அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்றத் தன்மையால் பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழலும் உருவாகி இருக்கிறது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு