Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'துளியும் கவலை வேண்டாம்'!... இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஃபியட் கொடுத்த உறுதிமொழி
இந்தியாவில் ஃபியட் கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், வாடிக்கையாளர்களுக்கு முக்கிய உறுதிமொழியை அந்நிறுவனம் வழங்கி இருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் உலகின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. வலிமையான கட்டமைப்பு, எக்காலத்திற்கும் ஏற்ற வடிவமைப்பு அம்சங்களுடன் உலக அளவில் வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக ஃபியட் விளங்குகிறது.
ஃபியட் கார்களுக்கு இந்தியாவிலும் பெரிய அளவிலான ரசிக பட்டாளம் உண்டு. ஃபியட் கார்களை உருகி, மருகி காதலித்து வாங்கி பயன்படுத்தி வருபவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, புன்ட்டோ, லீனியா கார்களை இன்றவும் பொக்கிஷமாக பேணி பாதுகாத்து வரும் வாடிக்கையாளர்கள் மிக அதிகம்.
எனினும், இந்திய சந்தையில் ஜாம்பவான் நிறுவனங்களின் வியாபார தந்திரங்களுக்கு ஃபியட் நிறுவனத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணியில் கார்களை விற்பனை செய்து வந்த ஃபியட் பின்னர் தனி ஆவர்த்தனத்தை துவங்கியது.
ஆனாலும், எதிர்பார்த்த அளவு இந்திய வர்த்தகத்தில் சாதிக்க முடியவில்லை. இதனால், கடந்த ஆண்டு துவக்கத்திலேயே புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் உற்பத்தியை நிறுத்தியது.
ஆனால், தனது 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சப்ளை செய்ததன் மூலமாக இந்திய வர்த்தகத்தை ஓரளவு தாக்குப் பிடித்தது.
ஆனால், அந்த எஞ்சினுக்கும் பிஎஸ்6 ரூபத்தில் பிரச்னை வந்துள்ளதால், இந்திய வர்த்தகத்தை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு மாற்றாக, தனது ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜீப் பிராண்டு மூலமாக இந்தியப் பிரிவின் செயல்பாடுகளை தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில், ஃபியட் கார்கள் உற்பத்தி முடிவுக்கு வந்துவிட்டதால், அந்த கார்களுக்கான உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஃபியட் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது கார்களுக்கான உதிரிபாகங்கள் சப்ளை குறித்து ஃபியட் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஆட்டோ கார் இந்தியா தளத்திடம் பேசிய ஃபியட் க்றைஸ்லர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பார்த்தா தத்தா கூறுகையில்," அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஃபியட் கார்களுக்கான உதிரிபாகங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்," என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும், மோபர் நிறுவனத்துடன் இணைந்து புனே அருகில் சகனில் உதிரிபாகங்களுக்கான பிரத்யேக வினியோக மையத்தையும் அமைத்துள்ளதாக அவர் கூறி இருக்கிறார். ஒவ்வொரு ஃபியட் வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் உதிரிபாகங்கள் கிடைப்பதற்கு உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜீப் டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களில் ஃபியட் கார்களை சர்வீஸ் செய்வதற்கும், உதிரிபாகங்களை வாங்குவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பார்த்தா தத்தா கூறி இருக்கிறார். ஜீப் நிறுவனத்தின் டீலர்களில் மோபர் உதிரிபாக விற்பனை மையங்களும் உள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகத்தை துவங்கியது ஃபியட் நிறுவனம். 10 ஆண்டு காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் சிறப்பான வர்த்தகத்தை செய்து வந்தது. ஆனால் தனி ஆவர்த்தனம் மூலமாக வர்த்தம் மேலும் குறுகிப் போனதுதான் அந்த பிராண்டு இந்தியாவிலிருந்து விடைபெறுவதற்கு காரணமாகிவிட்டது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!