Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத் திட்டத்தை நீட்டிக்க எஃப்ஐசிசிஐ அமைப்பு கோரிக்கை
எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு ஃபேம் மானியத் திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) வலியுறுத்தி உள்ளது.
கொரோனா பிரச்னை காரணமாக வாகனத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொது போக்குவரத்து மற்றும் வாடகை வாகனத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த சூழலில், வாகனத் துறைக்கு போதிய ஊக்குவிப்புத் திட்டங்களை கொடுத்து மத்திய, மாநில அரசுகள் கை தூக்கி விட வேண்டும் என்று எஃப்ஐசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கான மார்க்கெட் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ள்ளது. இதில், முதலீடு செய்துள்ளவர்கள் கவலை கொண்டுள்ளதாகவும், புதிய முதலீடுகளும் தவிர்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர்த்து, மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.
மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள ஃபேம்-2 மானியத் திட்டத்தை வரும் 2025ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டும். இதன்மூலமாக, இந்த துறை மிக வேகமான வளர்ச்சியை பெறுவதுடன் உலக அளவில் மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா முன்னிலை பெற முடியும் என்று எஃப்ஐசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், எஃப்ஐசிசிஐ அமைப்பின் மின்சார வாகன உற்பத்திப் பிரிவு சார்பில் இந்த பரிந்துரைகள் மத்திய கனரக தொழில் அமைச்சகம், சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், நிதி அயோக் ஆகிய அரசு அமைப்புகளிடம் கோரிக்கைகள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் எஃப்ஐசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஃபேம்-2 மானியத் திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்கினால் மின்சார வாகன விற்பனையில் சிறப்பான இடத்தை பெறுவதற்கும், இந்த துறையில் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் உருவாவதற்கும் வழிவகுக்கும் என்று தனது கோரிக்கை கடிதத்தில் எஃப்ஐசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஃபேம்-2 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.10,000 கோடி நிதியிலேயே அடுத்த ஓர் ஆண்டுக்கு மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கும் வகையில் சிறப்பு ஊக்குவிப்பு மானியத் திட்டத்தை கூடுதலாக வழங்கினாலும் அது நிச்சயம் பெரிய பயன் அளிக்கும் என்றும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு வங்கிகள் அதிகபட்ச அளவு கடன் தருவதை உறுதி செய்வதற்கும் வழி வகை செய்தால் அது மிகுந்த பயன் அளிக்கும். மேலும், எலெக்ட்ரிக் பஸ் விற்பனையை ஊக்குவிக்கவும் ஃபேம்-2 திட்டத்தில் ஊக்குவிப்பு திட்டங்களை இந்த துறை சார்ந்த நிறுவனங்களுடன் கலந்து பேசி அமல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!