Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
2020 மஹிந்திரா தாரின் முதல் காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..? விரைவில் இணையத்தில் ஏலம்...
புதிய மஹிந்திரா தாரின் முதல் மாதிரி கார் தொண்டுக்காக ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ள மஹிந்திரா 2020 தார் மாடலை விற்பனைக்கு கொண்டுவருவதில் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 19) ஏலத்திற்கான பதிவுகள் திறக்கப்பட்ட நிலையில், ஏலம் வருகிற செப்டம்பர் 24-27 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் இந்த ஏலம் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் நிதி திரட்டுவதற்காகவே என்றும், இதன் மூலம் கிடைக்கும் நன்கொடையை பிராண்ட், வாடிக்கையாளரின் விருப்ப தொண்டுக்கான தொகையாக அளிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த ஏலத்தில் உட்படுத்தப்படவுள்ள 2020 தார் மாடலானது வெளிப்புறத்தில் ‘தார் #1' என்ற கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட முத்திரையை பெற்றிருக்கும். மேலும் ஏலத்தில் தேர்வு செய்யப்படும் உரிமையாளரின் பெயரின் முதல் எழுத்தும் வாகனத்தில் பொறித்து தரப்படவுள்ளது.
அதேபோல் உட்புறத்திலும் இருக்கைகளின் மீது போர்த்தப்பட்டிருக்கும் கவர்களும், டேஸ்போர்டில் வழங்கப்படும் அலங்கார தகடும் வரிசை எண் ‘1' உடன் வழங்கப்படும். இவை தவிர்த்த மற்ற இயந்திர பாகங்கள் அனைத்தும் வழக்கமான தார் மாடலை தான் ஒத்து காணப்படும்.
ஏலத்தில் வெற்றி பெறுபவருக்கு நான்கு என்ஜின்-கியர்பாக்ஸ் தேர்வுகள், ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் இரு ட்ரிம் நிலைகள் உள்ளிட்டவை 6 விதமான வெளிப்புற நிறத்தேர்வுகளுடன் கொடுக்கப்படவுள்ளன. ரெட் ரேஜ், அக்வாமரைன், நாப்போலி பிளாக், கேலக்ஸி கிரே, மிஸ்டிக் காப்பர் மற்றும் பாறையின் பழுப்பு உள்ளிட்டவை இந்த நிறத்தேர்வுகளில் அடங்குகின்றன.
ஏலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் மஹிந்திராவின் பொருந்தக்கூடிய தொகை ஆனது நாண்டி அறக்கட்டளை, ஸ்வேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரதமர் நிதியுதவி ஆகிய மூன்று அமைப்புகளில் ஏதேனும் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்படலாம்.
ஆன்லைன் ஏலத்தை மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் (MFCW) நடத்தும் அதே வேளையில், ஏலத்தை எர்ன்ஸ்ட் & யங் என்ற லண்டனை சேர்ந்த நிறுவனம் நடத்தும். வருங்கால ஏலதாரர்கள் தங்களது பெயர்களை பதிவுசெய்யும்போது திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையை குறிப்பிட வேண்டும்.
இரண்டாம் தலைமுறை ஆஃப்-ரோடருக்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி துவங்கப்படவுள்ளது. மேலும் அப்போதுதான் 2020 தாரின் விலைகளும் வெளியிடப்படவுள்ளன. நமக்கு தெரிந்தவரை இந்த மஹிந்திரா தயாரிப்பின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.5 லட்சத்தில் இருந்து ரூ.12.5 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!