Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா?
சுதந்திர தினம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் ஊரடங்கினால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையை அரசாங்கம் எளிதாக சமாளித்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 73 வருடங்கள் ஆன போதிலும் இந்தியா இன்னும் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாடாகவே உள்ளது. இந்த நிலைப்பாடு ஜனாபதி பயன்படுத்தும் காரில் இருந்து நமது அன்றாட வேலைப்பாடுகள் அனைத்திலும் பிரதிப்பலிக்கிறது என்பது உண்மை.
ஜனாபதியின் கார் என்று ஏன் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன் என்றால், இது அவரது போக்குவரத்து தன்மையை மட்டும் குறிப்பிடாமல் ஒருவகையில் நம் ஒட்டுமொத்த நாட்டின் தரத்தையும் வெளிப்படுத்துகிறது. இதனால் தான் பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் விலையுயர்ந்த கார்களை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் லிமௌசைன் எஸ்600 புல்மேன் கார்ட் காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தி வருகிறார். சுமார் 21.3 இன்ச் நீளம் கொண்ட இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரை தான் முந்தைய ஜனாதிபதிகளான பிரதீபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரும் பயன்படுத்தினர்.
முதன்முதலாக மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் மாடல் காரை பயன்படுத்திய இந்திய ஜனாதிபதி சங்கர் தயால் சர்மா ஆவார். 1992ல் இருந்து 1997 வரையில் இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்த இவர் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் லிமௌசைன் டபிள்யூ140 மாடலை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தினார்.
பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்து காணப்பட்ட இந்த பென்ஸ் கார் கையெறி குண்டுகளில் இருந்து இயந்திர துப்பாக்கியின் தோட்டாக்கள் வரையில் தாங்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது. இதனாலேயே 1990, 2000ஆம் காலக்கட்டங்களில் வெளிநாடுகளை சேர்ந்த பெரும்பான்மையான முக்கிய பிரமுகர்களின் முதன்மை தேர்வாக இந்த கார் விளங்கியது.
மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் லிமௌசைன் டபிள்யூ140 காரில் இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் வி8 வழக்கமான மாடல்களிலும், வி12 அதிகளவில் பாதுகாப்பை எதிர்பார்க்கும் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் கார்களிலும் பொருத்தப்படுகின்றன.
இன்னும் சொல்ல போனால் தயாரிப்பு நிறுவனம் பொருத்தும் பாதுகாப்பு வசதிகள் பாத்தாது என்று கூடுதல் பாதுகாப்பிற்காக கஸ்டமைஸ்ட் செய்து பயன்படுத்தி வருபவர்களும் உள்ளனர். இந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி சர்மாவின் காரிலும் கூடுதல் பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் அவை என்னென்ன என்பது பாதுகாப்பு கருதி இப்போது வரையிலும் ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. சங்கர் தயால் சர்மாவில் இருந்து கேஆர் நாராயணன், ஏபிஜே அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல் வரையில் இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் லிமௌசைன் டபிள்யூ140 கார் தான் அதிகாரப்பூர்வ ஜனாதிபதியின் காராக பயன்பாட்டில் இருந்தது.
பின்பு இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீல் தான் தனது பயன்பாட்டு காரை மெர்சிடிஸ்-மேபேக் எஸ்600 புல்மேன் (டபிள்யூ 220) ஆக அப்கிரேட் செய்தார். அதன்பின் ராம்நாத் கோவிந் ஜனாதிபதியான பிறகு இது டபிள்யூ221 வெர்சனாக அப்டேட் செய்யப்பட்டது.
இவர் தனது காரை டபிள்யூ222 வெர்சனாக இந்த வருடத்தில் அப்கிரேட் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவை சமாளிக்க இந்த முடிவை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்தார். சங்கர் தயால் சர்மா தான் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் மாடலை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி என்பதை அறிந்து கொண்டோம்.
அவருக்கு முந்தைய ஜனாதிபதிகள் பயன்படுத்திய கார்கள் என்னென்ன என்று பார்த்தால், அது இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது. இதில் பல கார்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளாக தான் உள்ளன. இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத் கார்டிலக், ஜீப் வில்லிஸ் என்ற இரு கார்களை பயன்படுத்தியுள்ளார்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு