Just In
- 36 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 50 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
10 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா காரை 1.11 கோடிக்கு வாங்கிய நபர்... காரணம் இருக்கு
புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி ரக காரின் முதல் யூனிட்டை, புது டெல்லியை சேர்ந்த ஒருவர் 1.11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
புதிய தலைமுறை தார் எஸ்யூவி காரை, மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட்டது. பொது பார்வைக்கு வந்த உடனேயே அனைவரின் கவனத்தையும் புதிய 2020 மஹிந்திரா தார் எஸ்யூவி கவர்ந்து விட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா தார் எஸ்யூவி கார் வரும் அக்டோபர் 2ம் தேதி (நாளை மறுதினம்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அன்றைய தினம் இந்த காரின் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படும். மஹிந்திரா தார் எஸ்யூவி ரக காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 15 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ விலை இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே சமூக நல பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் யூனிட் ஏலம் விடப்பட்டது. 5,400க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த ஏலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இறுதியில் 1.11 கோடி ரூபாய்க்கு இந்த கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் யூனிட், ஏலம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 80 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு கோரப்பட்டது. இடைப்பட்ட நாட்களில் பலர் ஏல தொகையை அதிகரித்து கொண்டே வந்தனர். இறுதியில் 1.11 கோடி ரூபாய்க்கு, மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் யூனிட் விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
புது டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா என்பவர், இந்த ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளார். என்ன வேரியண்ட் வேண்டும்? என்ன நிறத்தில் வேண்டும்? என்பதை இவர் மஹிந்திரா நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ஆகாஷ் மிண்டா விரும்புகின்றன வேரியண்ட்டை மஹிந்திரா நிறுவனம் ஒரு சில சிறப்பம்சங்களுடன், அவருக்கு வழங்கவுள்ளது.
அதாவது #1 பேட்ஜ் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த கார், ஆகாஷ் மிண்டாவிற்கு கிடைக்கவுள்ளது. இந்த ஏலத்தில் கிடைத்த 1.11 கோடி ரூபாய் பணம் முழுவதும், நந்தி பவுண்டேஷன், ஸ்வாடெஸ் பவுண்டேஷன் அல்லது பிஎம் கேர் நிதி என ஏதேனும் ஒரு அமைப்பிற்கு வழங்கப்படும். யாருக்கு வழங்க வேண்டும்? என்பதையும், ஏலத்தில் வெற்றி பெற்ற ஆகாஷ் மிண்டாவே முடிவு செய்யலாம்.
ஏலம் மூலம் திரட்டப்பட்ட பணம் யாருக்கு வழங்கப்படுகிறது? என்பது தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில், மஹிந்திரா தார் ஏற்கனவே பிரபலமாக உள்ளது. அதனை தற்போது பல்வேறு மாற்றங்களின் மூலம் மேம்படுத்தி, புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, பிரபலங்கள் பலரும் கூட புதிய தலைமுறை மஹிந்திரா தார் காரை சொந்தமாக்குவதற்கு ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த எஸ்யூவியின் அதிகாரப்பூர்வமான விலை விபரங்கள் தெரிவதற்கு இன்னும் வெறும் ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?