Just In
- 24 min ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 1 hr ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 1 hr ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 3 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- News நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! மக்களவை தொகுதியில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் யார்?
- Movies அந்த தைரியம் அவர்ட்ட இருக்கு.. விஜய்க்கு சல்யூட் அடிக்கணும்.. சமுத்திரகனி ஓபன் டாக்
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஓரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
வீட்டிற்கே சென்று மக்களை பரிசோதிக்கும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்...
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புனேவை சேர்ந்த பார்டியா ஜெயின் சங்காடான் என்ற அமைப்புடன் இணைந்து மஹிராஷ்டிராவில் வீட்டிற்கே சென்று மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.
ஃபோர்ஸ் நிறுவனம் இந்த மருத்துவ வசதிகளை ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மஹாராஷ்டிரா மக்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக மருத்துவ பொருட்கள் அடங்கிய 30 வேன்களை பயன்படுத்தி வரும் இந்நிறுவனம், இதில் டாக்டர்கள், உதவியாளர்களை உட்படுத்தி வருகிறது.
இந்த மருத்துவ உதவிகள் முக்கியமாக புனேவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கபட்டு வருகிறது. ஃபோர்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் கொரோனா நோயாளிகளை கண்டறிவதும், நோய் முற்றிய நோயாளிகளை தகுந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதுமே ஆகும்.
அனைத்து மருத்துங்களும், மருத்துவ உதவிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ பரிசோதனையின் மூலமாக தினமும் 2,500 நபர்களை பரிசோதிக்கும் ஃபோர்ஸ் நிறுவனம் குறைந்தது 500 கொரோனா வைரஸ் அறிகுறி உடையவர்களை அடையாளம் கண்டு வருகிறது.
30 வேன்கள் மூலமாக பொதுமக்களை சந்திக்கும் டாக்டர்கள் கொரோனா நோயாளிகளை அடையாளப்படுத்துவது மட்டுமில்லாமல் வைரஸில் இருந்து தற்காத்து கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பற்றியும் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.
இதுவரை கடந்த 24 நாட்களில் மொத்தம் 95,600 நபர்கள் ஃபோர்ஸ் நிறுவனத்தின் இந்த மருத்துவ பரிசோதனையில் உட்படுத்தப்பட்டு 945க்கும் அதிகமான நோயாளிகள் கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் முழுவதும் முடிவுக்கு வரும் வரை தொடரவுள்ளன.
இதுகுறித்து ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ப்ரசன் ஃபிரோடியா கூறுகையில், தற்சமயம் இந்தியாவின் ஹாட்ஸ்பாட் மாநிலமாக மஹாராஷ்டிரா இருப்பதால் அங்குள்ள மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்களும் மிகவும் வேலை பளுவில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனை சமாளிக்க எங்களது முயற்சியும் சிறிது உதவுகிறது எனும் போது பெருமையாகவுள்ளது.
எங்களது இந்த மருத்துவ உதவிகளை தவிர்த்து எங்களது க்ருப் (டாக்டர்.அபாய் ஃபிரோடியா க்ரூப்) ரூ.25 கோடியை கொரோனா நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது. இந்த தொகை சுகாதார உள்கட்டமைப்பு, இரத்த சேகரிப்பு பணிகளை மேம்படுத்த, நடமாடும் க்ளினிக்/சோதனை மையங்களை விரிவுப்படுத்த மற்றும் தேவைப்படுவோர்க்கு உணவுகளை வழங்க பயன்படுத்தப்படவுள்ளது என கூறினார்.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
ரயில் கிளம்பும் போது டக்குன்னு ஒரு ஆட்டம் கொடுக்குமே அது ஏன் தெரியுமா?
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா