Just In
- 22 min ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 54 min ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 2 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 3 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா பிரச்னை... வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட ஃபோர்டு!
கொரோனா வைரஸ் பிரச்னையால் எழுந்துள்ள நிலைமையை கருத்திக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.
கொரோனா பிரச்னையால் கார், பைக் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வாரண்டி காலம் நீட்டிப்பு, சர்வீஸ் காலத்திற்கு கூடுதல் அவகாசம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், ஃபோர்டு கார் நிறுவனம் முக்கிய அறிவிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, கடந்த மார்ச் 15ந் தேதி முதல் மே 30ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வாரண்டி காலாவதியாகும் வாடிக்கையாளர்கள் அதனை ஜூன் 30ந் தேதி வரை பயன்படுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கூடுதல் காலத்திற்கு வாரண்டி வாங்க திட்டமிட்டிருப்போரும் வரும் ஜூன் 30ந் தேதிக்குள் தங்களது வாரண்டி காலத்தை நீடித்து கொள்வதற்கான கால அவகாசமும் வழங்கப்படுகிறது.
இதேபோன்று, இந்த காலத்தில் இலவச கார் சர்வீஸ் திட்டங்களை வைத்திருப்போருக்கும் ஜூன் 30ந் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டு இருக்கிறது. எனவே, இலவச சர்வீஸ் காலாவதியாகிவிடும் என்ற அச்சம் இப்போதைக்கு தேவையில்லை.
மற்றொரு முக்கிய அறிவிப்பாக, வரும் 30ந் தேதி வரை கார் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விலை ஏற்றம் இல்லாமல் கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் ஃபோர்டு தெரிவித்துள்ளது. அதாவது, முன்பதிவு செய்து காத்திருப்பு காலத்தின்போது, விலை ஏறினாலும், வரும் 30ந் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு விலை ஏற்றம் பொருந்தாது.
வாடிக்கையாளர்களின் சந்தேகங்கள் மற்றும் இதர விஷயங்கள் குறித்த தகவல்களை பெறுவதற்காக தனது வாடிக்கையாளர் மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. போன், சமூக வலைதளங்கள் மற்றும் இமெயில் மூலமாக தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
அதேபோன்று, வாடிக்கையாளர்களுக்கான அவசர சாலை உதவி வழங்குவதற்கான சேவையும் 24 மணிநேரமும் வழங்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சாலை அவசர உதவி திட்டத்தில் சேராத தனது வாடிக்கையாளர்களுக்கும் ஊரடங்கு காலம் வரை அவசர உதவி சேவையை வழங்கப்படும் என்று ஃபோர்டு அறிவித்துள்ளது.
வாரண்டி காலாவதி, வாரண்டி கால நீட்டிப்பு, இலவச சர்வீஸ், சாலை அவசர உதவித் திட்டம் உள்ளிட்ட அனைத்து விதமான சந்தேகங்களையும் எந்த நேரத்திலும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக பெறலாம் என்றும் ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!