Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வீட்டிற்கே வந்து கார் சர்வீஸ்... புதிய வசதியை அறிமுகப்படுத்தியது ஃபோர்டு!
கார்களுக்கான வழக்கமான பராமரிப்பு பணிகளை வீட்டிலேயே செய்து தரும் டோர் சர்வீஸ் திட்டத்தை ஃபோர்டு கார் நிறுவனம் வழங்குகிறது. இதுதொடர்பான, கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.
கொரோனா பிரச்னையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா லாக் டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், வெளியிடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே செல்லும் நிலை உள்ளது.
இந்த நெருக்கடியான சூழலால், அனைத்து வர்த்தக ஸ்பானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெரும் முதலீடுகளுடன் இயங்கி வரும் கார் உற்பத்தி மற்றும் அதன் சேவை சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ள டீலர்கள் பெரும் வருவாய் இழப்பையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, கார்களுக்கு வழக்கமான பராமரிப்புப் பணிகளை செய்வதற்கு சர்வீஸ் மையங்களுக்கு வருவதையும் வாடிக்கையாளர்கள் தவிர்த்து வருகின்றனர். இதனை மனதில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டு முறைகளுடன் வீட்டிலேயே பராமரிப்புப் பணிகளை செய்து தரும் சர்வீஸ் திட்டத்தை ஃபோர்டு அறிமுகப்படுத்தி உள்ளது.
டயல் ஏ ஃபோர்டு என்ற பெயரிலான இந்த திட்டத்தின்படி, ஃபோர்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு சர்வீஸ் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆயில் சேஞ்ச் உள்ளிட்ட வழக்கமான பராமரிப்புப் பணிகளை வீட்டிலேயே செய்து கொடுக்கப்படும். கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுது நீக்குதல் உள்ளிட்ட பெரிய அளவிலான பராமரிப்பு தேவைப்பட்டால், சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் சென்று சரிசெய்து பின்னர் வாடிக்கையாளர் வீட்டிலேயே கார் டெலிவிரி கொடுக்கப்படும். இதற்கு சர்வீஸ் மையத்திற்கு டீலர் பணியாளர் மூலமாக எடுத்துச் சென்று திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
டயல் ஏ ஃபோர்டு திட்டமானது சென்னை, பெங்களூர், ஆமதாபாத், அவுரங்காபாத், புவனேஷ்வர், கொச்சி, டெல்லி, பரீதாபாத், காஸியாபாத், குர்கான், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்ணோ, மும்பை, நொய்டா, புனே, தானே மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் வழங்கப்படுகிறது. மேலும், பல முக்கிய நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வீஸ் தவிர்த்து, ஆன்லைனில் புதிய காரை முன்பதிவு செய்து வீட்டிலேயே டோர் டெலிவிரி திட்டத்தையும் ஃபோர்டு வழங்குகிறது. இதன் மூலமாக கொரோனா அச்சம் இல்லாமல், வாடிக்கையாளர்கள் தங்களது புதிய கார் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?