Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறங்கிய சென்னை ஃபோர்டு கார் ஆலை!
கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி காண்பதற்கான முயற்சிகளில் சென்னையிலுள்ள ஃபோர்டு கார் ஆலையும் களமிறங்கி உள்ளது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கண்ணுக்கு எதிரியாக புகுந்து மனிதர்களை துவம்சம் செய்து வரும் கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டும் முயற்சிகளில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளன. அந்தந்த நாட்டு அரசுகளுக்கு பெரு நிறுவனங்கள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. குறிப்பாக, கார் உற்பத்தி நிறுவனங்கள் பல முக்கிய பங்களிப்புகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில், ஃபோர்டு கார் நிறுவனமும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கான முயற்சிகளில் களம் புகுந்துள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள தனது கார் ஆலைகளில் முக கவசங்களை தயாரிக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது.
கொரோனா சிகிச்சையில் மையங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இந்த முக கவசங்கள் வழங்கப்படும்.
இந்த முக கவசங்களை ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய பொறியாளர்கள் குழு வடிவமைத்துள்ளது. கொரோனா சிகிச்சை களப்பணியில் ஈடுபட்டுள்ளோர் நலன் கருதி, அவர்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் முக கவசங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இதுதவிர்த்து, கொரோனா எதிர்ப்புக்காக பல்வேறு நாட்டின் அரசுகள் மற்றும் மக்களுக்கு 1 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி மற்றும் இதர உதவிகளை செய்வதற்கும் ஃபோர்டு கார் குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் வினய் ரெய்னா கூறுகையில்,"எங்களது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எங்களால் முடிந்த அளவுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகளை அளிப்பதற்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பிரச்னை காரணமாக, காலாவதியாகும் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் திட்டங்களை வரும் ஜூன் 30ந் தேதி வரை ஃபோர்டு கார் நிறுவனம் நீட்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!