Just In
- 9 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 54 min ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 1 hr ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்
கொரோனா அச்சம் காரணமாக, பார்வையாளர்கள் இல்லாமல் இந்த ஆண்டுக்கான ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கு ஃபார்முலா-1 பந்தய சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, இந்த ஆண்டுக்கான (2020 சீசன்) ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால், தொடர்ந்து ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கு இயலாத நிலையும், வீரர்களுக்கு தொற்றுப் பரவும் அச்சம் இருந்ததால், பந்தயங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வழிகள் குறித்து ஃபார்முலா-1 கார் பந்தய அமைப்பு ஆராய்ந்து வருகிறது. மேலும், அடுத்த மாதம் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆஸ்திரியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அதேநேரத்தில், கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, முதல்கட்டமாக பார்வையாளர்கள் இல்லாமல் குறிப்பிட்ட ஃபார்முலா-1 பந்தயங்களை நடத்துவதற்கு ஃபார்முலா-1 கார் பந்தய அமைப்பு திட்டமிட்டுள்ளது. வழக்கமாக 1.50 லட்சம் பேர் வரை ஒரு கார் பந்தயத்தை காண்பதற்கு வருகை தருவர். இதன் மூலமாக கொரோனோ தொற்றும் அபாயம் உள்ளதை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அடுத்த சில மாதங்களில் நிலைமையை ஆராய்ந்து, அதன் பிறகு பார்வையாளர்களையும், ரசிகர்களையும் அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை எந்த ஆரவாரமும் இல்லாமல் ஃபார்முலா-1 பந்தய களத்தில் வீரர்கள் அனலை கிளப்ப தயாராகி வருகின்றனர்.
வாரத்திற்கு இரண்டு பந்தயங்களை நடத்துவதற்கான வாய்ப்புகளையும் ஃபார்முலா-1 அமைப்பு ஆராய்ந்து வருகிறது. இதன்மூலமாக, இந்த சீசனுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அனைத்து போட்டிகளையும் நடத்தி முடித்துவிட முடியும் என்று அந்த அமைப்பு கருதுகிறது.
அதேபோன்று, ஒவ்வொரு அணியும் தலா 130 பணியாளர்களுடன் கார் பந்தய களத்திற்கு வருகை தரும். ஆனால், ஒவ்வொரு அணியும் 80 பேரை மட்டுமே அழைத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று ஃபார்முலா-1 அமைப்பு தெரிவித்துள்ளது.
பந்தய களத்திற்குள் வரும் அனைத்து வீரர்கள், அவர்களது அணி வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். சமூக இடைவெளி விதிகளும் பின்பற்றப்படும் என்றும் ஃபார்முலா-1 கார் பந்தய அமைப்பு தெரிவித்துள்ளது.
ஃபார்முலா-1 பந்தயங்களை களத்தில் பெரும் ஆரவாரத்துடன், நேரடியாக பார்க்க முடியாத வருத்தத்தில் ரசிகர்கள் இருந்தாலும், சில பந்தயங்களை தொலைக்காட்சி மூலமாக நேரலையில் காணும் வாய்ப்பு இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கருதலாம்.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!