பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்

கொரோனா அச்சம் காரணமாக, பார்வையாளர்கள் இல்லாமல் இந்த ஆண்டுக்கான ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கு ஃபார்முலா-1 பந்தய சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.

பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, இந்த ஆண்டுக்கான (2020 சீசன்) ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால், தொடர்ந்து ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கு இயலாத நிலையும், வீரர்களுக்கு தொற்றுப் பரவும் அச்சம் இருந்ததால், பந்தயங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்

இந்த நிலையில், இந்த ஆண்டு ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வழிகள் குறித்து ஃபார்முலா-1 கார் பந்தய அமைப்பு ஆராய்ந்து வருகிறது. மேலும், அடுத்த மாதம் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆஸ்திரியாவில் ஃபார்முலா-1 கார் பந்தயங்களை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்

அதேநேரத்தில், கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, முதல்கட்டமாக பார்வையாளர்கள் இல்லாமல் குறிப்பிட்ட ஃபார்முலா-1 பந்தயங்களை நடத்துவதற்கு ஃபார்முலா-1 கார் பந்தய அமைப்பு திட்டமிட்டுள்ளது. வழக்கமாக 1.50 லட்சம் பேர் வரை ஒரு கார் பந்தயத்தை காண்பதற்கு வருகை தருவர். இதன் மூலமாக கொரோனோ தொற்றும் அபாயம் உள்ளதை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்

அதேநேரத்தில், அடுத்த சில மாதங்களில் நிலைமையை ஆராய்ந்து, அதன் பிறகு பார்வையாளர்களையும், ரசிகர்களையும் அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை எந்த ஆரவாரமும் இல்லாமல் ஃபார்முலா-1 பந்தய களத்தில் வீரர்கள் அனலை கிளப்ப தயாராகி வருகின்றனர்.

பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்

வாரத்திற்கு இரண்டு பந்தயங்களை நடத்துவதற்கான வாய்ப்புகளையும் ஃபார்முலா-1 அமைப்பு ஆராய்ந்து வருகிறது. இதன்மூலமாக, இந்த சீசனுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அனைத்து போட்டிகளையும் நடத்தி முடித்துவிட முடியும் என்று அந்த அமைப்பு கருதுகிறது.

பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்

அதேபோன்று, ஒவ்வொரு அணியும் தலா 130 பணியாளர்களுடன் கார் பந்தய களத்திற்கு வருகை தரும். ஆனால், ஒவ்வொரு அணியும் 80 பேரை மட்டுமே அழைத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று ஃபார்முலா-1 அமைப்பு தெரிவித்துள்ளது.

பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்

பந்தய களத்திற்குள் வரும் அனைத்து வீரர்கள், அவர்களது அணி வீரர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். சமூக இடைவெளி விதிகளும் பின்பற்றப்படும் என்றும் ஃபார்முலா-1 கார் பந்தய அமைப்பு தெரிவித்துள்ளது.

பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்

ஃபார்முலா-1 பந்தயங்களை களத்தில் பெரும் ஆரவாரத்துடன், நேரடியாக பார்க்க முடியாத வருத்தத்தில் ரசிகர்கள் இருந்தாலும், சில பந்தயங்களை தொலைக்காட்சி மூலமாக நேரலையில் காணும் வாய்ப்பு இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கருதலாம்.

Most Read Articles
English summary
Formula 1 car races will restart in Austria from July with a revised schedule.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X