Just In
- 47 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா பிரச்னையை கருத்தில்கொண்டு, மோட்டார் வாகனங்களுக்கான பல்வேறு ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் அனைத்து வர்த்தக மற்றும் அலுவலக செயல்பாடுகளும் முடங்கி இருக்கின்றன. இந்த சூழலில், மக்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மோட்டார் வாகனங்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 1 முதல் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை போக்குவரத்து அலுவலங்களில் சரிபார்ப்பது மற்றும் காப்பீடு புதுப்பிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் நிலுவையில் இருந்து வருகிறது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
இதனை கருத்தில்கொண்டு, வாகனங்கள் மற்றும் அதன் காப்பீடு தொடர்பான ஆவணங்களுக்கான காலாவதி தேதி வரும் ஜூலை 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை பழைய ஆவணங்களே செல்லுபடியாகும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஓட்டுனர் உரிமம், வாகனத்திற்கான தகுதிச் சான்று, பதிவுக் கட்டணம், காப்பீட்டு ஆவணங்கள் வரும் ஜூலை 31ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வாகன உரிமையாளர்கள் சந்தித்த நடைமுறை பிரச்னைகளை மனதில் வைத்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பழைய ஆவணங்களை புதுப்பிக்கும்போது தாமதம் ஏற்பட்டால் அபராத கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 30 வரை கொடுக்கப்பட்ட செல்லுபடி காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் ஏற்கனவே கட்டணத்தை செலுத்தி, போக்குவரத்து அலுவலகம் அல்லத காப்பீடு அலுவலகத்தில் புதுப்பிக்க முடியாத சூழல் இருந்தால், பழைய ஆவணத்தை ஜூலை 31ந் தேதி வரை பயன்படுத்த முடியும். தாமதக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வர்த்தக ரீதியில் இயக்கப்படும் வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரியை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் 30 வரை வழங்கி இருக்கிறது தமிழக அரசு. இதனால், வர்த்தக வாகனங்களை இயக்குவோருக்கு சற்றே தளர்வு கிடைத்துள்ளது.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!