Just In
- 4 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- Movies கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஊரடங்கு நீட்டிப்பு... வாகன காப்பீடு புதுப்பிக்க கூடுதல் அவகாசம்!
கொரோனா வைரஸ் பூதாகரமான பிரச்னைகளை கிளப்பி இருக்கிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. வர்த்தக ஸ்பானங்கள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதால், பல்வேறு செயல்பாடுகளும் தேங்கி நிற்கின்றன.
கொரோனா வைரஸ் பூதாகரமான பிரச்னைகளை கிளப்பி இருக்கிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. வர்த்தக ஸ்பானங்கள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதால், பல்வேறு செயல்பாடுகளும் தேங்கி நிற்கின்றன.
முதல்கட்டமாக ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. வரும் மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு காலம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால், வர்த்தக செயல்பாடுகளை மனதில் வைத்து பல்வேறு அறிவிப்புகளையும், வழிகாட்டு முறைகளையும் மத்திய அரசும், அரசு துறைகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு புதுப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த மார்ச் 25ந் தேதி முதல் வரும் மே 3ந் தேதி வரை வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால், அதற்கு மே 15 வரை புதுப்பித்துக் கொள்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஏப்ரல் 21ந் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே 15ந் தேதி வரை வழங்கப்பட்டுள்ள கூடுதல் கால அவகாசத்தில் இழப்பீடு உரிமை கோருவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். அதாவது, ஏதேனும் விபத்து உள்ளிட்ட இழப்பு ஏற்பட்டாலும், இழப்பீடு கோருவதற்கான வாய்ப்பை மோட்டார் வாகன காப்பீட்டு பாலிசிதாரர்கள் பெற முடியும்.
வாகன காப்பீடு எந்த பிரச்னையும் இல்லாமல் தொடர்வதற்கு மே 15ந் தேதிக்குள் பிரிமீயத்தை செலுத்தி புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளது. இதேபோன்று, ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயத்தையும் புதுப்பிதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, வாகனங்களுக்கான வாரண்டி காலம் மற்றும் இலவச சர்வீஸ் காலத்தையும் வாகன தயாரிப்பாளர்கள் கூடுதல் கால அவகாசம் கொடுத்து நீட்டித்துள்ளனர். இதன்மூலமாக, ஊரடங்கு முடிந்த பின்னர், வசதியான நேரத்தில் சர்வீஸ் செய்து கொள்வதற்கான வாய்ப்பை பெற முடியும். இந்த காலத்தில் வாரண்டியையும் கோருவதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வந்தாலும், அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. கொரோனா தாக்கம் குறைந்தால் மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கையும், வர்த்தக செயல்பாடுகளும் படிப்படியாக சீரடையும்.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!