Just In
- 33 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 4 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இனி பெட்ரோல் நிலையத்தில் கியூ கட்டி நிற்க வேண்டாம்... மத்திய அரசின் சூப்பர் முடிவு!
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பெட்ரோல் நிலையத்தில் வரிசை கட்டி நின்று பெட்ரோல் போடும் நிலையை மாற்றுவதற்கான சூப்பர் முடிவு ஒன்றை மத்திய அரசு எடுக்க உள்ளது.
கொரோனா பிரச்னையால் கடந்த மார்ச் 24 முதல் தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விதிகள் கடுமையாக்கப்பட்டதால், வாகனப் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால், பெட்ரோல், டீசல் நுகர்வும் முற்றிலும் பாதித்தது. அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டன.
இதனால், கடந்த மாதத்தில் எரிபொருள் நுகர்வு 70 சதவீதம் குறைந்தது. இந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், வைரஸ் தொற்று குறைவானப் பகுதிகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால், வாகன எரிபொருள் நுகர்வும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.
இந்த நிலையில், சமூக இடைவெளி பிரச்னை மற்றும் வீடுகளில் இருக்கும் மக்களுக்கு எளிதாக எரிபொருள் கிடைக்க வழிவகை செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதன்மூலமாக பெட்ரோல் நுகர்வை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, வீடுகளிலேயே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருட்களை வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் டீசலை டோர் டெலிவிரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருட்களையும் டோர் டெலிவிரி செய்வதற்கான திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. மேலும், ஒரே பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, எல்பிஜி என அனைத்து வகை வாகன எரிபொருட்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டாடா குழுமம் முதலீடு செய்துள்ள புனே நகரை சேர்ந்த ரெப்போஸ் எனெர்ஜி நிறுவனம் எரிபொருட்களை வீடுகளில் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 3,200 நடமாடும் பெட்ரோல் நிலையங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!