Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவிடமிருந்து நல்ல செய்தி வரும்... நம்பிக்கையுடன் காத்திருக்கும் கிரேட்வால் மோட்டார்ஸ்!
இந்தியாவிடம் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய கார் சந்தையில் களமிறங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஹவல் பிராண்டு கார் மாடல்களை இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் ஆலையை கையகப்படுத்தி கார் உற்பத்தியை துவங்க கிரேட்வால் மோட்டார்ஸ் திட்டமிட்டது. அத்துடன், கார் உற்பத்தி, விற்பனை மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக இந்தியாவில் 1 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.7,500 கோடி) முதலீடு செய்ய இருப்பதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில், லடாக் பிராந்தியத்தில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய நிலப்பரப்பில் நுழைந்து அடாவடியில் ஈடுபட்டது. இதனால், ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து, சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா துவங்கியது.
அதன்படி, சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்கு சிறப்பு அனுமதி பெறுவதை கட்டாயமாக்கியது. மேலும், கிரேட்வால் உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடுகளை நிறுத்தி வைக்கவும் மஹாராஷ்டிர அரசு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து, கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறி இருப்பதாவது,"எமது நிறுவனம் உலகளாவிய வர்த்தகத்தை கொண்டது. மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்து பங்காற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். தகுதியான பணியாளர்களுக்கும், சூழலுக்கும் ஏற்ப வேலைவாய்ப்புகளை அனைத்து மட்டத்திலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்க முடியும்.
இந்திய அரசின் அனைத்து சட்டத் திட்டங்களுக்கும் ஏற்ப முதலீட்டு ஒப்பந்தத்தை ஏற்கவும் முடிவு செய்துள்ளோம். முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து நல்ல செய்தி வரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!