Just In
- 30 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 2 hrs ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அள்ளி குடுக்கறாங்க... எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் 50 ஆயிரம் ரூபாய்... சொன்னது யார்னு தெரியுமா?
டெல்லியை தொடர்ந்து தற்போது மற்றொரு மாநில அரசும் மின்சார வாகனங்களுக்கு மானிய தொகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக காற்று மாசுபாடு பிரச்னைக்கு முடிவு கட்ட முடியும். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு முக்கியமான காரணமாக உள்ளன.
அத்துடன் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்க முடியும். ஆனால் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையை விட மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகமாக இருப்பதால், அவற்றை வாங்க மக்கள் தயங்குகின்றனர். எனவே மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு சமீபத்தில், மின்சார வாகன கொள்கையை அறிவித்தது. இதில், மின்சார கார்களை வாங்குபவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோன்ற அறிவிப்பை முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான குஜராத் மாநில அரசும் தற்போது வெளியிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பருவநிலை மாற்ற துறை 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மின்சார வாகனங்களை (இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்) ஊக்குவிப்பதற்கான புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி மின்சார வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ரிக்ஸா ஓட்டுனர்கள் மற்றும் சுய தொழில் புரிய விரும்பும் நபர்களுக்கு குஜராத் மாநில அரசு மானியம் வழங்கவுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு அல்லது அதற்கும் மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மின்சார இரு சக்கர வாகனங்களை வாங்கினால், 12,000 ரூபாய் வரை அரசு மானியமாக கிடைக்கும்.
அதே நேரத்தில் ரிக்ஸா ஓட்டுனர்கள் மற்றும் சுய தொழில் புரிய விரும்பும் நபர்கள் மின்சார மூன்று சக்கர வாகனங்களை வாங்கினால், 48,000 ரூபாய் வரை அரசு மானியமாக கிடைக்கும். இது ஒரு வாகனத்திற்கு வழங்கப்படும் மானிய தொகையாகும். இதற்கு குஜராத் மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொதுமக்கள் மட்டுமல்லாது, மின்சார வாகன உற்பத்தியாளர்களும் இதனை வரவேற்றுள்ளனர். இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் குஜராத் சாலைகளில் குறைந்தபட்சம் 10,000 மின்சார இரு சக்கர வாகனங்களும், 5,000 மின்சார மூன்று சக்கர வாகனங்களும் ஓட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வரும் 2022ம் ஆண்டிற்குள் குஜராத் மாநில சாலைகளில் 1 லட்சம் மின்சார வாகனங்கள் இயங்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு விரும்புகிறது. இந்த இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குவதுடன் மட்டுமல்லாது, சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிக அளவில் கட்டமைப்பதற்கான முயற்சிகளையும் குஜராத் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!