Just In
- 11 min ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 1 hr ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- 2 hrs ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- 2 hrs ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Movies Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சீன சந்தையை அடுத்து இந்தியாவில் அறிமுகமான ஹெய்மா 8எஸ்... இது எத்தனை கார்களுக்கு போட்டி தெரியுமா..?
சீன நிறுவனமான எஃப்ஏடபிள்யூ-வின் பிரபல மாடல்களில் ஒன்றான ஹைமா 8எஸ் கார் இந்திய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புத்தம் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், சீனா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனமான எஃப்ஏடபிள்யூ, அதன் ஹெய்மா பிராண்டிலான வாகனங்களை இந்திய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.
இரண்டாம் நாளான நேற்றைய தினம் ஹெய்மா பிராண்டின்கீழ் சில வாகனங்களை அது காட்சிப்படுத்தியது. அதில் ஒன்றுதான் ஹெய்மா 8எஸ் காம்பேக்ட் எஸ்யூவி. இந்த காரை கடந்த ஆண்டுதான் எஃப்ஏடபிள்யூ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்தது.
இந்த எஸ்யூவி காரில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 195 பிஎஸ் பவரையும், 293 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த ஹெய்மா 8எஸ் எஸ்யூவி காரானது எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் டக்சன், ஜீபா காம்பஸ், எம்ஜி எச்எஸ் மற்றும் ஹவல் எஃப்7 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.
குறிப்பாக இதன் நீளம் 4565மிமீட்டரும், 1850மிமீ அகலம் மற்றும் 1682மிமீ உயரத்தையும் கொண்டுள்ளது. இதேபோன்று, வீல்பேஸ் 2700மிமீட்டரையும் கொண்டுள்ளது.
வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 8எஸ் கார் சிவப்பு நிறத்தில், 18இன்ச் ட்யூவல் டோன் அலாய் வீல்களைக் கொண்டு காட்சியளிக்கின்றது. இத்துடன், குரோம் பூச்சு கொண்ட க்ரில், எல்இடி ஹெடல்மேப், பம்பர் உள்ளிட்டவை கவர்ச்சியான தோற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, இதன் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் இன்டிகேட்டர் மின் விளக்குகள் காரின் முன்பக்க பேனட்டில் நிறுவப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இந்த காரின் ஃப்ளோட்டிங் டைப்பிலான ரூஃப்பில் பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 360 டிகிரி பார்க்கிங் கேமிரா மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பிரிமியம் வசதிகளும் காணப்படுகின்றன.
எஃப்ஏடபிள்யூ நிறுவனத்தின் இந்த கார் இந்திய சந்தையில் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கணிப்பதற்காக ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை அந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, ஹெய்மா பிராண்டின் 7எக்ஸ் எம்பிவி மற்றும் இ1 என்ற எலெக்ட்ரிக் கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த மின்சார கார் மலிவான விலைக் கொண்ட என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக இந்த கார் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் இது பேர்ட் எலெக்ட்ரிக் இவி1 என்ற பெயரில் களமிறக்கப்பட உள்ளது.
இதன் பெயருக்கு ஏற்ப பறவைகளைப் போல் சந்தை முழுவதும் பரந்துவிரிந்த டிமாண்டை பெறும் என்பது அந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
-
இ-பைக்கின் உற்பத்தி பணிகளை தொடங்கிய சென்னை நிறுவனம்! உலக நாடுகளே இத பாத்து மிரண்டு நிக்க போகுது!