Just In
- 6 min ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 26 min ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 2 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 4 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
Don't Miss!
- News வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை மோடி கையில் எடுத்துள்ளார்.. மனோ தங்கராஜ்
- Movies டாஸ்மாக்ல குடிச்சாலும் சரி.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல குடிச்சாலும் சரி.. தினந்தோறும் நாகராஜ் பளிச்!
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு... நொய்டா கார் ஆலையை மூடியது ஹோண்டா... 2 கார்களுக்கும் கல்தா!
கொரோனா பிரச்னையால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், கிரேட்டர் நொய்டாவில் செயல்பட்டு வந்த கார் ஆலை மூடுவதாக ஹோண்டா கார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்திய சந்தையில் இருந்து இரண்டு கார் மாடல்களையும் விலக்கிக் கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம் மிக நீண்ட காலமாக இந்திய சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு முதல் இந்திய கார் சந்தையில் வர்த்தகத்தில் ஹோண்டா ஈடுபட்டுள்ளது.
மேலும், கிரேட்டர் நொய்டாவில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஹோண்டா கார் ஆலை செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் தபுகெரா என்ற இடத்தில் புதிய ஆலையை திறந்தது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக புதிய கார் நிறுவனங்களின் வரவால் ஹோண்டா வர்த்தகம் இந்தியாவில் பெரும் பாதிப்படைந்தது. எதிர்பார்த்த அளவு விற்பனையில் வளர்ச்சியை எட்ட முடியவில்லை.
போதாக்குறைக்கு கொரோனா பிரச்னையும் சேர்ந்து கொண்டதால், நடப்பாண்டில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த ஹோண்டா கார் நிறுவனம் அதிரடியாக இந்திய வர்த்தகத்தை மறுசீரமைக்கும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.
இதன்படி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இங்கு சிவிக், சிஆர்வி மற்றும் புதிய தலைமுறை சிட்டி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில், புதிய சிட்டி கார் உற்பத்தியை ராஜஸ்தானில் உள்ள தபுகெரா ஆலைக்கு மாற்றி உள்ள ஹோண்டா கார் நிறுவனம், சிவிக் மற்றும் சிஆர்வி கார்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
கிரேட்டர் நொய்டா ஆலையானது ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை பெற்றிருந்தது. அதேநேரத்தில், தபுகெரா ஆலையில் ஆண்டுக்கு 1.8 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், பெரிய வகை கார்களை உற்பத்தி செய்ய இயலாது. இதற்கு கூடுதல் முதலீடு செய்ய ஹோண்டா விரும்பவில்லை.
எனவே, இந்திய சந்தையில் சிட்டி கார் மாடலுக்கு குறைவான விலை கொண்ட கார் சந்தையில் அதிக கவனம் செலுத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் கார் உற்பத்தி ஆலை மூடப்பட்டாலும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், உதிரிபாக கிடங்கு மற்றும் வினியோக பிரிவுகள் தொடர்ந்து செயல்படும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
கார் ஓட்டும்போது நிறைய பேரு இந்த தவறு பண்ணுறோம்!! வெளிநாடுகளில் இதுக்கு தடை இருக்கு...
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!