'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?

பிரபல ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வரும் 2022ம் ஆண்டோடு குறிப்பிட்ட நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணம் மற்றும் கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உருவாகிய சிக்கல்கள் காரணமாக ஹோண்டா நிறுவனத்தின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக சில கசப்பான முடிவெடுகளை ஹோண்டா நிறுவனம் எடுத்து வருகின்றது.

'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?

அந்தவகையில், மிக சமீபத்தில் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் செயல்பட்டு வந்த கார் உற்பத்தி ஆலையை ஒட்டுமொத்தமாக இழுத்து மூடுவதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஹோண்ட நிறுவனம் பற்றி வெளிவர தொடங்கியுள்ளது.

'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?

இந்நிறுவனம் குறிப்பிட்ட ஓர் காரணத்திற்காக ஒரு நாட்டை விட்டே வெளியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா நாட்டு சந்தையை விட்டே இந்நிறுவனம் வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டோடு இந்நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் நிறுத்த இருப்பதாக அது அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கின்றது.

'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?

வரவேற்பு குறைவு மற்றும் தொடர் விற்பனைச் சரிவு ஆகிய காரணங்களுக்காக ஹோண்டா ரஷ்யா நாட்டு வாகனச் சந்தையை விட்டு வெளியேற இருக்கின்றது. இதனை முன்னிட்டு டீலர்களுக்கு வாகனங்களை அனுப்பி வைக்கும் செயலையும் அது முடுக்கியுள்ளது.

'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?

தன்னுடைய உலகளவிலான வர்த்தகத் திட்டத்தை ஹோண்டா நிறுவனம் அண்மையில் மாற்றியமைத்தது. இந்த புதிய திருத்தத்தின்போதே ரஷ்யா நாட்டை விட்டு வெளியேறும் திட்டத்தை உறுதி செய்தது. நாட்டை விட்டு வெளியேறினாலும், விற்பனைக்கு பிந்தைய சேவையைத் தொடர்ந்து தொடருவோம் என ரஷ்யர்களுக்கு அது நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?

ஆகையால், ஏற்கனவே ஹோண்டா காரை வாங்கிய முகவர்கள் ஹோண்டாவின் வெளியேற்றைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே பெரியளவில் வரவேற்பைப் பெறாத சூழலே ரஷ்யாவில் ஹோண்டாவிற்கு நிலவி வந்திருக்கின்றது.

'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?

இதனால், கடந்த காலங்களில் உற்பத்தியைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையை அது எடுத்திருந்தது. இந்த நிலையிலேயே அதிரடியாக ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு வெளியேறுவதாக அது அறிவித்திருக்கின்றது. நடப்பாண்டின் 11 மாதங்களில் ஒட்டுமொத்தமாகவே 1,383 யூனிட் வாகனங்களை மட்டுமே ஹோண்டா விற்பனைச் செய்திருக்கின்றது.

'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா?

இது கடந்த 2019ம் ஆண்டைக் காட்டிலும் 15 சதவீதம் குறைவாகும். குறிப்பாக, 2020 நவம்பரில் மட்டும் 50 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஹோண்டா சந்தித்திருக்கின்றது. அம்மாதம் முழுக்க வெறும் 79 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது. இந்த மிக மிக மோசமான விற்பனை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே ரஷ்யாவை விட்டு ஹோண்டா வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Decided To Stop Selling Cars In Russia From 2022. Read In Tamil.
Story first published: Wednesday, December 30, 2020, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X