Just In
- 29 min ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 2 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 2 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 3 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- News 11 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்த பெண்.. கணவனின் முட்டாள்தனமான செயலால்.. பெரும் சோகம்
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Movies நாயகன் படத்தில் இருந்து சிவாஜியை தூக்கினாரா கமல்ஹாசன்?.. பல வருட ரகசியத்தை வெளிப்படுத்திய பிரபலம்!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...
புதிய எஸ்யூவி மாடல்களின் தயாரிப்பில் ஹோண்டா நிறுவனம் தீவிரமாக உள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ராஜேஷ் கோய்ல் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏகப்பட்ட புதிய எஸ்யூவி மாடல்களும் அவற்றை தயாரிப்பதில் பிரபலமான எம்ஜி, கியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவும் இந்தியாவில் நுழைந்துள்ளன.
இந்த வகையில் ஹோண்டா இந்தியா நிறுவனமும் புதியதாக எஸ்யூவி மாடல் ஒன்றை சந்தையில் களமிறக்க கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து ராஜேஷ் கோய்ல் கூறுகையில், எங்களது முழு செடான் லைன்-அப் தற்சமயம் நீண்டதாகவே உள்ளது. ஆனால் எஸ்யூவி லைன்-அப்பில் தான் சிறிய இடைவெளி உள்ளது என கூறியுள்ளார்.
ஏனெனில் இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு சிஆர்-வி எஸ்யூவி மற்றும் ஜாஸ் மாடலின் அடிப்படையிலான டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் கார்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நமது நாட்டு சந்தையில் பிஆர்-வி எம்பிவி மற்றும் எச்ஆர்-வி மிட்சைஸ் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த கடந்த ஆண்டில் இருந்தே திட்டமிட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை விரைவாக நிறைவேற்றும் வகையில் முன்னோக்கி செல்லவுள்ளோம் என கூறியுள்ள கோய்ல், எனது லைன்-அப்பை பொறுத்தவரையில், எஸ்யூவி மாடல்கள் தேவைப்படுகின்றன. நாங்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
இந்நிறுவனத்தின் சில எஸ்யூவி மாடல்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் இந்திய சந்தைக்கு ஏற்றவற்றை கவனமாக தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
முன்னதாக இந்நிறுவனம் இந்தியாவிற்காக புதிய இரு எஸ்யூவி கார்களின் விற்பனையில் பணியாற்றி வருவதாக நமது தளத்தில் தெரிவித்திருந்தோம். 2யுஏ குறியீட்டு பெயருடன் உள்ள ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படவுள்ள இந்த எஸ்யூவி மாடல்கள் இரண்டாம்-தலைமுறை அமேஸ் மாடலை அடிப்படையாக கொண்டிருக்கும்.
இதில் முதல் தயாரிப்பு சப்-4 மீட்டர் எஸ்யூவியாக மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ மாடல்களுக்கு போட்டியாக விளங்கும். இதன் அறிமுகம் 2022ல் நடைபெறும் என தெரிகிறது. மற்றொரு 4.2- 4.3 மீட்டர் நீளத்தில் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களுக்கு விற்பனையில் போட்டியினை அளிக்கும் விதத்தில் இருக்கும்.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
ரயில் கிளம்பும் போது டக்குன்னு ஒரு ஆட்டம் கொடுக்குமே அது ஏன் தெரியுமா?
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!