Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...
புதிய எஸ்யூவி மாடல்களின் தயாரிப்பில் ஹோண்டா நிறுவனம் தீவிரமாக உள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ராஜேஷ் கோய்ல் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏகப்பட்ட புதிய எஸ்யூவி மாடல்களும் அவற்றை தயாரிப்பதில் பிரபலமான எம்ஜி, கியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவும் இந்தியாவில் நுழைந்துள்ளன.
இந்த வகையில் ஹோண்டா இந்தியா நிறுவனமும் புதியதாக எஸ்யூவி மாடல் ஒன்றை சந்தையில் களமிறக்க கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து ராஜேஷ் கோய்ல் கூறுகையில், எங்களது முழு செடான் லைன்-அப் தற்சமயம் நீண்டதாகவே உள்ளது. ஆனால் எஸ்யூவி லைன்-அப்பில் தான் சிறிய இடைவெளி உள்ளது என கூறியுள்ளார்.
ஏனெனில் இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு சிஆர்-வி எஸ்யூவி மற்றும் ஜாஸ் மாடலின் அடிப்படையிலான டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் கார்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நமது நாட்டு சந்தையில் பிஆர்-வி எம்பிவி மற்றும் எச்ஆர்-வி மிட்சைஸ் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த கடந்த ஆண்டில் இருந்தே திட்டமிட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை விரைவாக நிறைவேற்றும் வகையில் முன்னோக்கி செல்லவுள்ளோம் என கூறியுள்ள கோய்ல், எனது லைன்-அப்பை பொறுத்தவரையில், எஸ்யூவி மாடல்கள் தேவைப்படுகின்றன. நாங்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
இந்நிறுவனத்தின் சில எஸ்யூவி மாடல்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் இந்திய சந்தைக்கு ஏற்றவற்றை கவனமாக தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
முன்னதாக இந்நிறுவனம் இந்தியாவிற்காக புதிய இரு எஸ்யூவி கார்களின் விற்பனையில் பணியாற்றி வருவதாக நமது தளத்தில் தெரிவித்திருந்தோம். 2யுஏ குறியீட்டு பெயருடன் உள்ள ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படவுள்ள இந்த எஸ்யூவி மாடல்கள் இரண்டாம்-தலைமுறை அமேஸ் மாடலை அடிப்படையாக கொண்டிருக்கும்.
இதில் முதல் தயாரிப்பு சப்-4 மீட்டர் எஸ்யூவியாக மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ மாடல்களுக்கு போட்டியாக விளங்கும். இதன் அறிமுகம் 2022ல் நடைபெறும் என தெரிகிறது. மற்றொரு 4.2- 4.3 மீட்டர் நீளத்தில் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களுக்கு விற்பனையில் போட்டியினை அளிக்கும் விதத்தில் இருக்கும்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!