Just In
- 18 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 6 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
Don't Miss!
- News பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்கிறது ஹோண்டா!
தொழில்நுட்ப பிரச்னையை பரிசோதிக்கும் விதமாக, ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை இந்தியாவில் திரும்பி அழைக்க இருப்பதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஹோண்டா கார்களில் தொழில்நுட்ப பிர்சனை இருப்பது தெரிய வந்துள்ளது. ஹோண்டா அமேஸ், சிட்டி, ஜாஸ், டபிள்யூ-ஆர்வி, பிஆர்-வி, பிரியோ மற்றும் சிஆர்வி ஆகிய அனைத்து கார்களிலும் இந்த பிரச்னை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதாவது, எரிபொருள் கலனிலிருந்து எஞ்சினுக்கு எரிபொருளை பம்ப் செய்து கொடுக்கும் இம்பெல்லர் உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், கார் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை ஏற்படும் என்றும் தெரிகிறது.
இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை திரும்ப அழைத்து பரிசோதிக்க இருப்பதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைபாடுடைய இம்பெல்லர் கொண்ட ஃப்யூவல் பம்ப்பை மாற்றித் தருவதற்கும் திட்டமிட்டுளளது.
கடந்த 2018ம் ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 32,498 அமேஸ் கார்கள், 16,434 சிட்டி கார்கள், 7,500 ஜாஸ் கார்கள், 7.057 டபிள்யூ-ஆர்வி கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
அதேபோன்று, இதே காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 1,622 பிஆர்-வி கார்கள், 360 பிரியோ கார்கள், 180 சிஆர்வி எஸ்யூவிகளும் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இடம்பெற இருக்கின்றன. மொத்தமாக 65,651 கார்களை திரும்ப அழைக்க உள்ளது ஹோண்டா.
வரும் 20ந் தேதி முதல் இந்த திரும்ப பெறும் நடவடிக்கை துவங்கப்படும் என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
கொரோனா பிரச்னை காரணமாக, குறைவான பணியாளர்களுடன் சர்வீஸ் மையங்கள் இயங்கி வருவதால், முன்பதிவு செய்து கொண்டு தங்களது காரை சர்வீஸ் மையத்திற்கு எடுத்து வருவமாறு ஹோண்டா கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த திரும்ப பெறும் நடவடிக்கையானது நிறைவு செய்வதற்கு சற்று கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிகிறது.
இந்த திரும்ப பெறும் நடவடிக்கையில் உங்களது கார் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஹோண்டா இணையதளத்தில் உங்களது காரின் 17 இலக்க வின் நம்பரை பதிவு செய்து விபரங்களை பெற முடியும். இங்கே க்ளிக் செய்து அதற்கான விபரங்களை ஹோண்டா வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
-
ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!