Just In
- 17 min ago ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- 2 hrs ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 4 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 5 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
Don't Miss!
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Movies மீண்டும் பைக்கை எடுத்த அஜித்.. அப்போ விடாமுயற்சி அவ்ளோதானா?.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட செம பிக்!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
எம்ஜி ஹெக்டருக்கு கிடைத்த வரவேற்பு... எச்ஆர்வியை மனதில் வைத்து ஆழ்ந்த யோசனையில் ஹோண்டா!
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு கிடைத்துள்ள வரவேற்பை மனதில் வைத்து, எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியா கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகளை ஹோண்டா நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது.
காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு இருக்கும் வரவேற்பை போலவே, மிட்சைஸ் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பும் இந்தியாவில் தடாலடியாக உயர்ந்துள்ளது. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இதில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில், எம்ஜி ஹெக்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பு பிற நிறுவனங்களையும் இந்த ரகத்தில் புதிய மாடலை களமிறக்குவதற்கு தூண்டி வருகிறது.
அந்த வகையில், ஹோண்டா கார் நிறுவனமும் எம்ஜி ஹெக்டர் மார்க்கெட்டை குறிவைத்துள்ளது தெரிய வந்துள்ளது. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவில் டபிள்யூஆர்வி மற்றும் சிஆர்வி ஆகிய இரண்டு மாடல்களுக்கு இடையில் புதிய எஸ்யூவி மாடலை களமிறக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையில் ரூ.20 லட்சம் வரை விலை வித்தியாசம் இருக்கிறது. எனவே, மிட்சைஸ் எஸ்யூவியை களமிறக்குவது சிறப்பானதாக கருதுகிறோம். அதற்கு எச்ஆர்வி எஸ்யூவி சரியான தேர்வாக இருக்கும். எனவே, இந்த மாடலை கொண்டு வருவது குறித்து தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஹோண்டா எச்ஆர்வி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவ்வப்போது செய்தி வெளியாவது, அடங்குவதுமாக இருந்து வருகிறது. அதாவது, இந்த எஸ்யூவிக்கு 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே இந்திய உதிரிபாகங்களை பயன்படுத்தப்படும் நிலை. மீதமுள்ள 70 சதவீத பாகங்களை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யும் கட்டாயம் இருந்தது.
இதன் காரணமாக, போட்டியாளர்களை விட விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை மனதில் வைத்தே இந்த எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியா கொண்டு வருவதற்கு ஹோண்டா தயக்கம் காட்டி வருகிறது. ஆனால், தற்போது இந்த செக்மென்ட்டில் உள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான முயற்சியை தற்போது ஹோண்டா கையில் எடுத்துள்ளது.
ஹோண்டா எச்ஆர்வி க்ராஸ்ஓவர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது மிட்சைஸ் எஸ்யூவி ரகத்தில் கச்சிதமாக பொருந்தும். ஆனால், சந்தைப் போட்டி பலமாக இருப்பதால், விலையை சரியாக நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஹோண்டா பிராண்டு மதிப்பை மனதில் வைத்து இந்த எஸ்யூவியை தேர்வு செய்வதற்கு பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் விரும்ப மாட்டார்கள்.