Just In
- 14 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியது ஹூண்டாய்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கி உள்ளது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம்.
கொரோனா பாதிப்பு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. நாட்டிலேயே இரண்டாவது அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலமாகவும் தமிழகம் மாறி இருக்கிறது.
இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சமயத்தில், அனைவரும் நிதி உதவி அளித்து உதவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் வைத்தார்.
இதையடுத்து, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடி அளித்துள்ளது.
தமிழக தொழிற்துறை முதன்மை செயலாளர் முருகானந்த்திடம் ரூ.5 கோடிக்கான காசோலையை ஹூண்டாய் அதிகாரிகள் நேரில் வழங்கியதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குனர் எஸ்எஸ் கிம் கூறுகையில்,"இந்த சவாலான நேரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக எங்களது தாய் வீடு போல விளங்கும் தமிழகத்திற்கும், மக்களுக்கும் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முற்பட்டு வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் கார் ஆலை அமைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழகத்தில் செய்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான அரசு முயற்சிகளுக்கும் உற்ற துணையாக நிற்பதாக அறிவித்துள்ளது.
மேலும், கொரோனா தடுப்பிற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா திட்டமிட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான ஆய்வுக் கருவிகள் மற்றும் மருத்துவ பொருட்களையும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளது.
முக கவசங்கள், வென்டிலேட்டர் கருவிகள், சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவற்றையும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. மக்களுக்கு தேவையான கிருமி நாசினி திரவத்தையும் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
கொரோனா பிரச்னையால் சென்னையில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் ஆலையில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அந்நிறுவனத்திற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தடுப்பு நடிவடிக்கையில் தமிழக அரசுக்கு உறுதுணையாக பல்வேறு நிதி உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி