Just In
- 50 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
3 மாதத் தவணைகளுக்கு நாங்க கேரண்டி... சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஹூண்டாய்!
இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். கார் வாங்கி திட்டமிட்டு, வேலை இழப்பு அச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் அதிக நம்பிக்கையை தருவதாக இருக்கும். இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள முடக்கத்தை சாதுர்யமாக கையாளும் முயற்சிகளில் ஹூண்டாய் இறங்கி உள்ளது. ஏற்கனவே, ஆன்லைன் மூலமாக கார் விற்பனை செய்யும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. அத்துடன், கொரோனாவுடன் போராடும் அரசு மற்றும் சுகாதாரத் துறையினருக்கு உதவிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், டீலர்களில் கார் விற்பனையை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஹூண்டாய் இறங்கி உள்ளது. ஆனால், பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் ஒன்றரை மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு அபாயங்களில் சிக்கி உள்ளனர்.
இந்த சூழலால் கார் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனினும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை மனதில் வைத்து கார் வாங்குவதற்கு திட்டமிடலாம். ஆனால், வேலை இழப்பு அச்சம் அவர்களை வாட்டி வதைத்து வருகிறது.
இதனை மனதில் வைத்து, இந்த மாதம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசத்தல் அறிவிப்பை ஹூண்டாய் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த மாதத்தில் புதிய ஹூண்டாய் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான மாதத் தவணை உத்தரவாத திட்டத்தை ஹூண்டாய் அறிவித்துள்ளது.
இதன்படி, இந்த மாதம் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஓர் ஆண்டில் வேலை இழப்பு ஏற்படும் பட்சத்தில், மூன்று மாதங்களுக்கான மாதத் தவணையை ஹூண்டாய் ஈடுகட்டும். இந்த திட்டம் கார் வாங்கிய நாளில் இருந்து ஓர் ஆண்டிற்கு செல்லத்தக்கதாக இருக்கும்.
அதேநேரத்தில், முதல் மூன்று மாதங்கள் கணக்கில் கொள்ளப்படாது. அதாவது, வாடிக்கையாளர்களே கட்டாயம் செலுத்த வேண்டும். அதன்பிறகான 9 மாத காலத்தில் ஏதேனும் வேலை இழப்பு பிரச்னை ஏற்பட்டால், மூன்று மாதங்களுக்கான மாதத் தவணையை ஹூண்டாய் ஏற்றுக் கொள்ளும்.
இந்த திட்டம் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில், புதிய க்ரெட்டா, டூஸான், கோனா மற்றும் எலான்ட்ரா உள்ளிட்ட கார்களை வாங்குவோருக்கு இல்லை என்றும் ஹூண்டாய் தெளிவுப்படுத்தி உள்ளது.
அதாவது, பட்ஜெட் கார் வாங்கும் நடுத்தரப் பொருளாதார பிரிவு வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் இந்த திட்டத்தை ஹூண்டாய் அறிவித்துள்ளது. இந்த திட்டம் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அமையும். ஆனால், இந்த மாதத்திற்குள் வாங்குவோருக்கு மட்டுமே பொருந்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?