Just In
- 10 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 29 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி!
மாருதி கார் ஆலை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், சென்னை ஹூண்டாய் கார் ஆலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் ஆலை கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டது. அதிலிருந்து ஒன்றரை மாதங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கடந்த 8ந் தேதி முதல் அங்கு உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டன.
அரசு வழிகாட்டு முறைகள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சென்னை ஹூண்டாய் ஆலையில் கார் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டன. இந்த நிலையில், தனது சென்னை ஆலையில் பணிபுரிந்து வரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு மூலமாக தெரிவித்துள்ளது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
சென்னை ஆலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் வாரத்தில் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மூவரும் இப்போது வேகமாக குணமடைந்து வருகின்றனர். இதுதொடர்பான விபரங்கள் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதுடன், ஆலையில் கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்த பின்னர், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சென்னை ஆலையை திறந்தது. இந்த சூழலில், தற்போது அங்கு பணிபுரிந்த மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது அந்நிறுவனத்திற்கும், அங்கு பணிபுரிவோர் மத்தியிலும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆலைக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் உரிய பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். ஆலைக்குள் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்புப் பணிகளுடன் சென்னை ஹூண்டாய் ஆலையில் உற்பத்திப் பணிகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!