Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொரோனா ஒழிப்பு போர்... பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு அள்ளிக்கொடுத்த ஹூண்டாய்!
கொரோனா ஒழிப்புப் போரில் பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் பெரிய அளவிலான தொகையை கொடுத்து நெகிழ வைத்துள்ளது.
கொரோனா தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு புறம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மறுபுறத்தில் பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த இரட்டை தாக்குதலால், கொரோனா எதிர்ப்பு போருக்கு அதிக அளவிலான நிதி உதவியும், இதர உதவிகளும் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது.
அந்தவகையில், கொரோனா எதிர்ப்பு போருக்கு தேவையான நிதியை பெறுவதற்காக பிஎம் கேர்ஸ் என்ற நிவாரண நிதி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கினார். இந்த அசாதாரண சூழலில், பிஎம் கேர்ஸ் நிதி திட்டத்திற்கு நாட்டு மக்களுக்கும், நிறுவனங்களும் நிதி உதவியை வழங்குமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்று, மக்களும், நிறுவனங்களும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. அந்த வகையில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.7 கோடியை வழங்கி உள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்எஸ் கிம் கூறுகையில்,"சமூகத்திற்கு சிறந்த திட்டங்களையும், உதவிகளையும் வழங்குவதில் எங்களது பவுண்டேஷன் முக்கிய நோக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சவாலான தருணத்தில் பிஎம் கேர்ஸ் மூலமாக இந்திய மக்களுக்கு உதவி செய்வதை கடமையாக கருதுகிறோம். மனிதாபிமானத்துடன் இந்த மோசமான நிலையை கடப்பதற்கு இந்தியாவுடன் உறுதுணையாக இருப்போம்,"என்று தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னை அருகே கார் ஆலைகளை அமைத்துள்ளது. மேலும், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அண்மையில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதி உதவியையும் வழங்கியது.
கொரோனா ஒழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகளுக்காக கொரியாவிலிருந்து ரூ.4 கோடி மதிப்புடைய பரிசோதனை உபகரணங்களையும், வென்டிலேட்டர் கருவிகளையும் கூட இறக்குமதி செய்து வழங்கியது.
அத்துடன், மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் விசேஷ உடைகள், முக கவசங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஹரியானா மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கும் தயாரித்து வழங்கி வருகிறது.
மொத்தத்தில் கொரோனா எதிர்ப்பு தடுப்புப் பணிகளுக்காக தனது முழுமையான ஒத்துழைப்பையும், நிதி உதவிகளையும் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. இதேபோன்று, மாருதி சுஸுகி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் அதிக அளவில் கொரோனா தடுப்புப் பணிகளில் தங்களதை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!