Just In
- 40 min ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 1 hr ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Movies கமல்ஹாசனின் மாமா மறைவு.. கண்கலங்கி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன்
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லட்சக்கணக்கான கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..!
ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிட்ட ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார்களை தொழிற்சாலைக்கு திரும்பி அழைத்து வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணாலம்.
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் குறிப்பிட்ட ஆண்டுகளில் தயாரித்த ஒரு சில மாடல் கார்களை மட்டும் தொழிற்சாலைக்கு திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான காரணத்தைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்ககும்.
தற்போது இந்தியாவில் 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில், உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் புதிய வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
ஹூண்டாய் நிறுவனுமும் ஒன்றுதான். ஒரு பக்கம் புதிய வாகனங்களை களமிறக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் ஹூண்டாய், மறுபக்கம் தனது முந்தைய தயாரிப்புகளில் உள்ள கோளாறுகளை நிவர்த்தி செய்யும் பணியிலும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
அந்தவகையில், தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் கடந்த 2006 முதல் 2011 வரை தயாரிக்கப்பட்ட எலன்ட்ரா மற்றும் 2007 முதல் 2011 ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட எலென்ட்ரா டூரிங் ஆகிய மாடல்களை தான் ஹூண்டாய் தற்போது ரீகால் செய்துள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டுகளில் மட்டும் 4,30,000 வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவையனைத்திலும் எஞ்ஜினை எளிதில் தீ பீடிக்க வைக்கின்ற அளவிலான கோளாறுகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த காரில் உள்ள ஆண்டிலாக் பிரேக் கம்ப்யூட்டரை தண்ணீர் எளிதில் சேதப்படுத்தும் நிறுவப்பட்டுள்ளது. இது, எல்கட்ரிக்கல் ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தி எஞ்ஜினில் தீ விபத்தை உருவாக்குகின்ற அளவிற்கு ஆபத்தானதாக உள்ளது.
இதன்காரணமாகவே, குறிப்பிட்ட ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான கார்களை ஹூண்டாய் திரும்ப அழைத்துள்ளது.
ஹூண்டாயின் இந்த திடீர் அழைப்பிற்கு ஏதேனும் முந்தைய தீ விபத்து சம்பவங்கள் இருக்கின்றதா என்ற கேள்வி எழும்புகின்றது. ஆனால், கடந்த காலங்களில் இதுபோன்ற தீ விபத்து சம்பவங்கள் மிகவும் குறைவாகவே நிகழ்ந்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.
ஆகையால், அவை அதிகரிப்பதற்கு முன்னதாகவே தகுந்த நடவடிக்கை எடுக்கும் விதமாக பாதிப்பிற்குள்ளாகிய வாகனங்களை திரும்பி அழைக்கும் நடவடிக்கையில் ஹூண்டாய் களமிறங்கியிருக்கின்றது.
இந்த அழைப்பில், பாதிப்புடன் காணப்படும் வாகனங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் அதன் உரிமையாளர்களிடமே வழங்கப்பட உள்ளது.
இதற்கான அனைத்து உபகரணங்களுடன் தயாராக இருக்கும்படி ஹூண்டாய் அதன் சர்வீஸ் மையங்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதேசமயம், தீ விபத்து சம்பவங்களுக்கான அறிகுறி வெகு குறைவாகவே இருக்கின்றது. ஆகையால் வாடிக்கையாளர்கள் எந்த கவலையும் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கான ஆவணங்கள் சிலவற்றை ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்கூட ஹூண்டாய் மற்றும் இதன்கீழ் இயங்கும் கியா நிறுவனத்தின் கார்கள் தானாக தீ பிடித்ததாக கூறப்பட்ட 3,100 புகார்களை அடுத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த தீ விபத்தில் 103 காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, மூன்று மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் விபத்தைச் சந்திக்காமல் தீ ஏற்பட்டதாக அதிர்ச்சிமிகுந்த தகவல் வெளியாகியது. அதில், பெரும்பாலும் 2011 முதல் 2014 வரை தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் சொனாட்டா மற்றும் சேன்டா ஃபே மாடல்களும், கியாவில் ஆப்டிமா மற்றும் சொரேன்டோ உள்ளிட்ட கார்களும் அதிகம் தீ விபத்தைச் சந்தித்துள்ளன. இவையும் அதே 2011-14 கலாகட்டத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.
இந்த சம்பவங்களுக்கு எஞ்ஜின் தோல்வியே மிக முக்கியமான காரணம் என கூறப்படுகின்றது. வெவ்வேறு உதிரிபாகங்கள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெற்றதே இந்த சம்பவத்திற்கான முக்கிய காரணம் என்பது தெரியவந்தது.
இந்த கார்களும் பிற்காலங்களில் தொழிற்சாலைகளுக்கு வரவழைக்கப்பட்டு சீரமைத்து மீண்டும் வழங்கபட்டன. தற்போது மீண்டும் இதே மாதரியான ஓர் பணியைதான் ஹூண்டாய் அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் மேற்கொண்டு வருகின்றது.
Source: Auto Economic Times
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!