500 கிமீ ரேஞ்ச்... எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

எலெக்ட்ரிக் கார்களுக்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை உருவாக்கி இருக்கிறது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். இந்த கட்டமைப்புக் கொள்கை வியக்கும் வைக்கும் பல நன்மைகளுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

500 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள்... புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

சூடுபிடிக்கும் சந்தை

எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்கள் இல்லாமல் காலம் தள்ள முடியாத நிலை இருக்கிறது. இதற்காக, பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.

500 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள்... புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

யுக்தி மாறுகிறது

தற்போது ஏற்கனவே உள்ள பெட்ரோல், டீசல் கார்களின் கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி, அதன் அடிப்படையிலேயே எலெக்ட்ரிக் கார்களை பல நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. ஆனால், எதிர்காலத்தில் இது முழுமையாக கை கொடுக்காது. இதனை மனதில் வைத்து, எலெக்ட்ரிக் கார்களுக்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

500 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள்... புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

பிரத்யேக கட்டமைப்புக் கொள்கை

ஹூண்டாய் இ-ஜிஎம்பி (E-GMP) என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையில் ஏராளமான புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை ஹூண்டாய் உருவாக்க இருக்கிறது. இதே கட்டமைப்புக் கொள்கையில் புத்தம் புதிய கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட உள்ளது.

500 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள்... புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

அதிசெயல்திறன் மிக்க மின்சார கார்கள்

இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் கார்களில் அதிசெயல்திறன் மிக்க பேட்டரி பொருத்தப்பட உள்ளது. அதேபோன்று, செயல்திறனையும், அதிக தூரம் பயணிப்பதை உறுதி செய்யும் வகையில் உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பயன்படுத்தப்படும்.

500 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள்... புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

500 கிமீ ரேஞ்ச்

இந்த புதிய எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சோதனை நிலைகளில் 500 கிமீ தூரத்திற்கும் மேல் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. அதேபோன்று, இந்த கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் கார்களின் பேட்டரியை 18 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

500 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள்... புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

அதீத செயல்திறன்

அதிக பயண தூரத்தை வழங்குவதுடன் இதன் செயல்திறன் மிக்க மாடல்களானது 0 - 100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிடும். அதேபோன்று, மணிக்கு 260 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

500 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள்... புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

சிறந்த பாதுகாப்பு அம்சங்கள்

பயணிகளுக்கு அதிக இடவசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த கார்களில் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படும்.

500 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள்... புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

முதல் மாடல்

ஹூண்டாய் நிறுவனத்தின் இ-ஜிஎம்பி கட்டமைப்புக் கொள்கையில் முதல் மாடலாக ஐயோனிக்-5 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து, பல புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்த கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். வரும் 2025ம் ஆண்டில் உலக அளவில் பேட்டரியில் இயங்கும் 23 எலெக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்துவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

500 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள்... புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!

சிறந்த மதிப்பு

ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய இரண்டு பிராண்டுகளிலும் இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் கார்கள் களமிறக்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் இந்த புதிய ஹூண்டாய் கார்கள் சந்தையில் மிகச் சிறந்த தேர்வாக மாறும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Hyundai has revealed of its all-new electric-vehicle platform called E-GMP that will serve as the base of Hyundai and Kia's global EV future beginning in 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X