Just In
- 23 min ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 1 hr ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- 2 hrs ago என்ன மேடம்... ஹர்பஜன் சிங் மாதிரி இருக்கீங்க!! விசித்திரமான கெட்-அப்பில் ஸ்கூட்டரில் சென்ற பெண் - வீடியோ!
Don't Miss!
- News பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Finance தங்கம் இறக்குமதியில் தடாலடி சரிவு.. மக்களின் முடிவால் நகை கடைக்காரர்கள் சோகம்..!!
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் மிஸ்ட்ரா எனும் எலெக்ட்ரிக் காரை தற்போது நடைபெற்றும் குவாங்சோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியுள்ளது. இதனை ஒற்றை நாட்டிற்காக பிரத்யேகமாக ஹூண்டாய் தயாரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஹூண்டாய் நிறுவனம் அதன் புதிய ரக மின்சார வாகனம் ஒன்றை தற்போது வெளியீடு செய்துள்ளது. 2020 குவாங்சோ மோட்டார் ஷோவிலேயே ஹூண்டாய் இக்காரை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 20ம் தேதி தொடங்கி வருகின்ற 29ம் தேதி வரை இந்த வாகன கண்காட்சி நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் எதிர்கால வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்தவகையில், பிரபல ஹூண்டாய் நிறுவனமும் அதன் எதிர்கால செடான் ரக மிஸ்ட்ரா எனும் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாகன கண்காட்சி போன்ற அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்குமே தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் லேசாக தணிந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் வாகன கண்காட்சியாக குவாங்சோ மோட்டோர் ஷா நடைபெற்று வருகின்றது.
'புதிய தொழில்நுட்பம், புதிய வாழ்க்கை' என்ற கருப்பொருளின்கீழ் இந்த ஷோ நடைபெற்று வருகின்றது. இது 18ம் ஆண்டு சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியிலேயே ஹூண்டாய் எதிர்கால எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மிட்சைஸ் செடான் எலெக்ட்ரிக் காரை பிரத்யேகமாக சீன சந்தைக்காக மட்டுமே ஹூண்டாய் வடிவமைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
ஆகையால், இதன் இந்திய வருகை கேள்விக்குறியே. ஆனால், இக்கார் உலக மின்சார வாகன பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இதன் ரேஞ்ஜ் விகிதம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கின்றது. இக்காரை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 520 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி இக்காரில் சொகுசு மற்றும் இட வசதியும் ஏராளம் என்றும் ஆட்டோ ஷோவில் கலந்துக் கொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கேற்ப இதன் நீளம், உயரம் மற்றும் அகலம் ஆகியவை உள்ளன. அதேசமயம், ஹூண்டாய் சொனாட்டா கார்களைக் காட்டிலும் இதன் அளவு சற்று சிறியதாக இருக்கின்றது. ஆனால் இதன் தோற்றம் பார்ப்பதற்கு எலென்ட்ரா கார்களைப் போன்றே காட்சியளிக்கின்றது.
இந்த காரில் தொழில்நுட்ப வசதிகளாக 12.3 இன்ச் அளவு கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 12.3 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவர் அசிஸ்டண்ட் வசதி, பனோரமிக் சன் ரூஃப், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், நேவிகேஷன் அடிப்படையிலான க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்கள் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த பன் முக சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் மிஸ்ட்ரா எலெக்ட்ரிக் கார் சீனாவில் வருகின்ற 2021ம் ஆண்டில் இருந்து விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதை முன்னிட்டே ஹூண்டாய் நிறுவனம் நடைபெற்று வரும் குவாங்சோ வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்த 9.5 மணி நேரங்கள் தேவைப்படுகின்றது. இது மிக அதிக கால அவகாசம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்
-
அம்பானியிடம் கூட இல்ல!! இளைஞர் வாங்கியுள்ள காரை பார்த்து வாயடைத்து நிற்கும் நெட்டிசன்கள்... முதல் கார் ஓனர்!!