Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!
மூன்று பயணிகளுடன் பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ காரை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய இராணுவப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் ஒன்று பொலிரோ. எம்யூவி ரகத்திலான இந்த காருக்கு பொதுமக்கள் மற்றும் அரசு தரப்பில் அமோகமான வரவேற்பு நிலவுகின்றது. குறிப்பாக, இந்த காரை பொதுமக்களைக் காட்டிலும் காவல்துறை மற்றும் இந்திய ராணுவத்துறையினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். அரசு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக இந்த ரக வாகனங்களையே அரசு வழங்கி வருகின்றது.
எம்யூவி ரகத்திலான வாகனங்கள், ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடில் இயங்குவதற்கு ஏற்ப கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் எஞ்ஜின் திறனைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, மலை மற்றும் அடர்ந்த வனப் பகுதிகளின் கரடு, முரடான பாதையில் பயணிப்பதற்கு ஏற்ற திறனை அவைப் பெற்றிருக்கின்றன.
இதன் காரணத்தினாலயே, அரசு அதன் ஊழியர்களுக்கு இந்த ரக வாகனங்களை பரிந்துரைத்து வருகின்றன.
இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் இந்த சிறப்பு வாய்ந்த பொலிரோ எம்யூவி கார் பனிச் சிதைவில் சிக்கியதைப் போன்ற வீடியோக்காட்சி ஒன்று டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அந்த கார், குபாவார மாவட்ட வருவாய் கோட்டாட்சியரின் (Sub District Magistrate)அதிகாரப்பூர்வ வாகனம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த காரில் கோட்டாட்சியர் உட்பட கர்நாஹ் பகுதியைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளனர். அவர்களும் அரசு பணியாளர்கள் ஆவர்.
இவர்கள் வட காஷ்மீரின் கடும் குளிர் பிரதேசமான அவலாஞ்சி என்னும் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இந்திய இராணுவ படையினர், காருக்குள் சிக்கியவாறு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த கோட்டாட்சியர் மற்றும் அவருடன் பயணித்த இருவரையும் சில மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர்.
நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகின்றது. அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் எஸ்டிஎம், பிலால் மோஹி-அஸ்-தின் மற்றும் உடன் பயணித்தவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அவலாஞ்சிக்கு செல்லும் பாதையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பின்னர், இராணுவ படையினர் அந்த காரை அகற்றி சாலை போக்குவரத்து சீரமைத்தனர்.
தற்போது, இந்தியாவின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. ஆனால், அவிலாஞ்சி போன்ற குளிர்பிரதேசங்களில் பனி இன்னும் ஓயாமல் பொழிந்துக் கொண்டிருக்கின்றது.
அதேசமயம், கால நிலை மாற்றம் காரணமாக சில பகுதிகளில் இம்மாதிரியான பனிச் சரிவு ஏற்பட்டு வருகின்றது. எனவே, காஷ்மீரில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையிலேயே வருவாய் கோட்டாட்சியரின் மஹிந்திரா பொலிரோ கார் பனிச் சரிவில் சிக்கியது.
இவர் அரசு அதிகாரிகளுடன் இணைந்து கொரோனா வைரஸ் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்று ஆய்வு செய்வதாக கூறப்படுகின்றது. அப்போதே, இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
பனி சரிவு விபத்தால் காரின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்துள்ளது. அதுமட்டுமின்றி முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியிருக்கின்றது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், "அதிகாரிகள் அதிர்ஷ்டசாலிகள். பனி சரிவின் பக்கவாட்டிலேயே அவர்கள் சிக்கினார்கள். அதன் மையப் பகுதியில் இருந்தால் குறைந்தது 500 அடி ஆழத்திற்குள் அவர்களின் கார் விழுந்திருக்கும். மேலும், பனிச் சரிவும் ஏற்பட்டதால், அதனை மீட்பது இயலாத காரியமாக மாறியிருக்கும்" என அச்சத்துடன் தெரிவித்தனர்.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!