Just In
- 24 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 30 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனாவால் ஆட்டோமொபைல் துறைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த சூழல், பெரு நிறுவனங்களை கூட திணற வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டத் துவங்கியிருக்கிறது. இதுவரை 415 பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 8 பேர் இந்த கொடிய நோய்க்கு உயிர் இழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனாவால் மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. இதுவரை இல்லாத பெரும் அச்ச உணர்வையும், இழப்புகளையும் கொரோனா ஏற்படுத்தி உள்ளது.
யாரும் எதிர்பாராத இந்த கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால், மக்கள் வெளியே வர முடியாத நிலை உருவாகி இருப்பதுடன், இயல்பு வாழ்க்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அனைத்து தொழில் மற்றும் உற்பத்தி மையங்கள் முடங்கி இருக்கின்றன.
இந்த நிலையில், கொரோனா பிரச்னை ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. கடந்த ஓர் ஆண்டாகவே வாகன விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தற்போது பிஎஸ்6 வாகனங்களுக்காக பெரிய அளவிலான முதலீடுகளை வாகன நிறுவனங்கள் செய்துள்ளன.
மேலும், சில நிறுவனங்களும், டீலர்களும் கையில் இருப்பில் தேங்கிவிட்ட பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஒரு வாரமே கால அவகாசம் உள்ளது. இந்த நெருக்கடியான நிலையில், இந்தியா ஸ்தம்பித்துள்ள நிலையில், விற்பனை அடியோடு முடங்கி உள்ளது.
இந்த சூழலில், கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்கள் ஆலைகள் மற்றும் டீலர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரூ.13,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த உற்பத்தி திறனில் ஆட்டோமொபைல் துறை மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அதாவது, மொத்த உற்பத்தியில் 7.5 சதவீதமும், ஆலை வாயிலான உற்பத்தித் துறையில் 49 சதவீதம் பங்களிப்பையும் வழங்கி வருகிறது.
இந்த சூழலில், இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, அரசின் வரி வருவாயிலும், வேலைவாய்ப்பிலும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் ஒரு வாரம் கழித்தே, கொரோனா பாதிப்பின் வேகத்தை வைத்து அரசு முடிவுகளை எடுக்கும். அதன் பிறகே, ஆட்டோமொபைல் துறையின் செயல்பாடுகள் சீரடைய வாய்ப்புகள் உள்ளன.
Source: ET Auto
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!