Just In
- 25 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 36 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சென்னையில் தயாரான 'சூரன்'... இந்தியாவின் முதல் ஆளில்லா போர் வாகனம்!
இந்தியாவின் முதல் ஆளில்லாமல் சென்று போரிடும் தானியங்கி வாகனத்தை சென்னையை சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த வாகனத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கடந்த மாதம் லக்ணோவில் நடந்த பாதுகாப்புத் துறை கண்காட்சியில் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போதே, ராணுவத்தினரின் கவனத்தை இந்த வாகனம் பெரிதும் ஈர்த்தது. காரணம், இந்த வாகனத்தை ஆளில்லாமல் போர் முனைக்கு அனுப்பி தாக்குதல் நடத்த முடியும்.
இந்த புதிய வாகனத்திற்கு சூரன் என்று தமிழ் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த வாகனத்தை சென்னையை சேர்ந்த டிஃபென்ஸ் மாஸ்டர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
போர் முனையில் வீரர்களை கொண்டு செல்லாமல் இந்த வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் அல்லது தூரத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் முறையில் இயக்க முடியும்.
ரிமோட் கன்ட்ரோல் முறையானது இதற்கான பிரத்யேக ரிமோட் கன்ட்ரோல் சாதனம் மூலமாகவும் அல்லது ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாகவும் இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு. அதாவது, ரிமோட் கன்ட்ரோல் அல்லது ஸ்மார்ட்ஃபோன் முறையில் இயக்க முடியாத போது, அதுவே தானியங்கி முறையில் செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும்.
இந்த வாகனத்தின் மேல்புறத்தில் துப்பாக்கி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த துப்பாக்கியையும் ரிமோட் கன்ட்ரோல் முறையில் துல்லியமாக இயக்க முடியும். இந்த வாகனத்தில் தொலைநோக்கு கேமராக்கள், சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு கருவிகள், போதுமான மின்சாரத்தை வழங்கும் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனத்தை உருவாக்குவதற்கு ஒன்றரை ஆண்டுகாலம் பிடித்ததாக, டிஃபென்ஸ் மாஸ்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டென்னிஸ் எபினேசர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வித நிலபரப்புகளிலும் எளிதாக செல்வதற்கு ஏதுவான கட்டமைப்பு, டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், எதிரிகளின் தாக்குதல்களில்களை சமாளிப்பதற்கு போதுமான கவச வாகனத்திற்கு உரிய வலிமையான கட்டமைப்பையும் பெற்றிருக்கிறது.
இந்த வாகனம் வெறும் 500 கிலோ மட்டுமே எடை கொண்டுள்ளதால், போர் முனைக்கு எளிதாக கொண்டு செல்லும் வாய்ப்பை வழங்கும். இந்த வாகனம் முழுமையான தகுதியை பெறும்பட்சத்தில், போர் முனையில் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான வாகனமாக மாறும்.
Source: FE Onilne
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!