Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்!
அதிசெயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் மின்சார வாகனத் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஜாகுவார் பிராண்டில் ஏற்கனவே ஐ-பேஸ் என்ற மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிக செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் கார்களை ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் சொகுசு கார்களின் அதி செயல்திறன்மிக்க மாடல்களானது SVO என்ற பிரிவு ஏற்றுக் கொண்டு உருவாக்கி வருகிறது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அதன்படி, சாதாரண சொகுசு எலெக்ட்ரிக் கார்களின் அதிசெயல்திறன்மிக்க மாடல்களை சிறப்பு வாகனத் தயாரிப்புப் பிரிவு ( SVO) மூலமாக உருவாக்குவதற்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிறப்பு வாகன தயாரிப்புப் பிரிவின் தலைவர் மைக்கேல் வான் டெர் சான்டே கூறுகையில்," எமது எஸ்விஓ பிரிவின் கீழ் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் மாடல்களின் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
முதல் மாடலாக ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரை அதிசெயல்திறன் மிக்க மாடலாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார். இதனால், கோடீஸ்வரர்கள் மத்தியில் பெரும் ஆவல் எழுந்துள்ளது.
தற்போது ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்விஆர், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர், ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்வி ஆட்டோபயோகிராஃபி உள்ளிட்ட மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் கஸ்டமைஸ் மாடல்களுக்கான வரவேற்பு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனை மனதில் வைத்து சிறப்பு வாகனத் தயாரிப்பு பிரிவை விரிவாக்கம் செய்ய ஜாகுவார் லேண்ட்ரோவர் முடிவு செய்துள்ளது. எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் எஸ்விஓ பிரிவின் கீழ் பல புதிய ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எதிர்பார்க்கலாம்.
இதற்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்குவதற்கு அந்நிறுவனத்தின் புதிய மோடுலர் லான்ஜிடியூடினல் ஆர்க்கிடெக்ச்சர் கட்டமைப்பு கொள்கை உதவிகரமாக இருக்கும் என்று தெரிகிறது.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!