Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்
ஜாகுவார் நிறுவனம் எக்ஸ்இ, எக்ஸ்எஃப் மற்றும் எஃப்-பேஸ் மாடல்களின் டீசல் வேரியண்ட்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஜாகுவார் கார்களை பற்றியும் விற்பனை நிறுத்தப்பட்டதற்கான காரணத்தையும் இந்த செய்தியில் பார்போம்.
ஜாகுவார் நிறுவனம் எக்ஸ்இ, எக்ஸ்எஃப் மற்றும் எஃப்-பேஸ் மாடல்களில் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை பொருத்தி வந்தது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 177 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது.
இந்த டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படாததால் தான் இந்த மூன்று ஜாகுவார் மாடல்களின் டீசல் வேரியண்ட்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி இந்நிறுவனத்தின் தனித்துவமான செடான் மாடலான எக்ஸ்ஜே-ன் விற்பனையும் இந்தியாவில் நிறுத்தப்பட்டது.
ஏனெனில் இந்த செடான் காரில் பொருத்தப்பட்டு வந்த வி6 என்ஜினை இந்திய சந்தைக்கு வழங்குவதை ஜாகுவார் நிறுவனம் நிறுத்தியுள்ளது. டீசல் வேரியண்ட்டை இழந்திருந்தாலும் கடந்த 2019ல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பெற்ற எக்ஸ்இ மாடல் பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு கிடைக்கும்.
இதன் 2.0 லிட்டர் இங்கேனியம் டர்போ-பெட்ரோல் என்ஜினாது அதிகப்பட்சமாக 247 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ள எக்ஸ்இ மாடல் எக்ஸ்ஷோரூமில் ரூ.46.64 - ரூ.48.5 லட்சத்தை விலையாக கொண்டுள்ளது.
இதன் என்ஜின் தேர்வுகளுடன் தான் எக்ஸ்எஃப் மற்றும் எஃப்-பேஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எக்ஸ்இ மாடலை காட்டிலும் எக்ஸ்எஃப் கார் தோற்றத்தை பெரியதாக கொண்டது மட்டுமில்லாமல், தொழிற்நுட்ப வசதிகளையும் கூடுதலாக கொண்டுள்ளது. இதனால் இதன் விலை எக்ஸ்ஷோரூமில் சற்று அதிகமாக ரூ.55.67 லட்சமாக உள்ளது.
எஃப்-பேஸ் லக்சரி-எஸ்யூவி மாடலாக இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கிள் ட்ரிம் தேர்வுடன் விற்பனையில் ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி மாடல்களை எதிர்கொண்டுவருகின்ற இந்த லக்சரி எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை சந்தையில் ரூ.66.07 லட்சமாக உள்ளது.
2.0 லிட்டர் டீசல் என்ஜின் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் ஜாகுவார் நிறுவனம் நிறுத்தியுள்ளதால் இதற்கு மாற்றாக கூடுதல் என்ஜின் தேர்வுகளை வருங்காலத்தில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!