Just In
- 28 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 47 min ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜேம்ஸ் பாண்டின் தீவிர ரசிகராம்... 34 லட்ச ரூபாயை அசால்டாக வாரி இறைத்த இளைஞர்... வாயடைத்துபோன உறவினர்கள்...
ஜேம்ஸ் பாண்ட் ரசிகர் ஒருவர் ரூ. 34 லட்சத்தை குறிப்பிட்ட காரணத்திற்காக வாரி இறைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், தான் ஒரு தீவிர ரசிகர் என்பதைக் குறிப்பிட்ட செயலின் மூலம் குஜராத் மாநிலம், அஹமதாபாத் பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர் நிரூபித்துள்ளார். இந்த சுவாரஷ்ய சம்பவம்குறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
டொயோட்டா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஃபார்ச்சூனர் காரும் ஒன்று. இந்த காரின் புதிய மாடலுக்கான பதிவெண்ணை வாங்கியதன் மூலமே இவர் மிகுந்த ஜேம்ஸ் பாண்ட் ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. ஆமாங்க, நீங்க யூகித்தது சரிதான், புதிய காரின் பதிவெண்ணாக 007-ஐ அவர் பெற்றிருக்கின்றனர்.
இதனைப் பல லட்சங்கள் செலவில் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தியின்படி, அஹமாதபாத்தைச் சேர்ந்த ஆஷிக் படேல், ரூ. 34 செலவில் இந்த பதிவெண்ணை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. 007 பதிவெண்ணைக் கொண்ட கார்களைதான் ஜேம்ஸ் கதாபாத்திரம் பயன்படுத்துவார்.
எனவே இந்த எண்ணுக்கு உலகளவில் பிரியர் இருக்கின்றனர். அத்தகைய இந்தியரே காரின் விலைக்கு இணையான தொகையில் பதிவெண்ணை வாங்கியிருக்கின்றார். ஆமாங்க புத்தம் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலையே ரூ. 39.50 லட்சங்களாக இருக்கின்றது. இதற்கு இணையான விலையிலேயே பதிவெண்ணை ஆஷிக் படேல் வாங்கியிருக்கின்றார். இவரின் இந்த செயலால் அவருடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றனர்.
இந்த பதிவெண்ணால் தற்போது ஆஷிக் படேலின் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் மதிப்பு 85 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்டதாக மாறியிருக்கின்றது. இந்த கார் ஜிஜே 01 டபிள்யூஏ 007 (GJ01WA007) என்ற காட்சியளிக்கும். இந்த பதிவெண்ணை ஆஷிக் படேல், ஏலத்திலேயே வென்றிருக்கின்றார். அண்மையில் இணையம் வாயிலாக 007 என்ற எண்ணிற்கான ஏலம் 25 ஆயிரம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் தொடங்கியது.
பலரின் அணுகலை அடுத்து இதன் விலை. ரூ. 25 லட்சங்களாக உயர்ந்தது. கடைசியாக ரூ. 34 லட்சத்தில் ஆஷிக் படேல் வென்றார். அஹமதாபாத் ஆர்டிஓ அதிகாரிகளே எதிர்பார்த்திராத உச்சபட்ச ஏல மதிப்பாகும். இந்த பதிவெண் தனக்கு ராசியான எண் என்பதானலேயே இதனை தான் வாங்கியிருப்பதாக ஆஷிக் படேல் கூறியுள்ளார்.
இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிரீமியம் தரத்திலான எஸ்யூவி கார்களில் டொயோட்டா ஃபார்ச்சூனரும் ஒன்று. இந்த கார் இந்தியாவில் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் ஆகிய அவை ஆகும்.
இக்கார், இந்தியாவில் ஃபோர்டு என்டீயோவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கும் அளிக்கின்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலை மாடலின் விலை ரூ. 28.66 லட்சங்கள் ஆகும். அதிகபட்ச விலையே 36.88 லட்சங்கள் ஆகும். இக்காரின் புதுப்பிக்கப்பட்ட விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது.